இந்தியாவின் ஐஸ்கிரீம் லேடியான ரஜினி பெக்டரின் நிகர மதிப்பு ரூ.6000 கோடி

இந்தியாவில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. பாலின வேறுபாடுகளைத் தகர்த்து பல்வேறு வணிகத் துறைகளில் பெண் தொழிலதிபர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷலிட்டிஸ் லிமிடெட்டின் நிறுவனர் ரஜினி பெக்டர் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

அவர் தனது நிறுவனத்தை ரூ. 20,000 என்ற சிறிய முதலீட்டில் தொடங்கினார். அதை FMCG துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக நிலைநிறுத்தினார். ஒரு தொழிலதிபராக அவரது உத்வேகப் பயணத்தை இந்திய அரசு அங்கீகரித்து ஜனவரி 2021 இல் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

இந்தியாவின் ஐஸ்கிரீம் லேடியான ரஜினி பெக்டரின் நிகர மதிப்பு ரூ.6000 கோடி

இங்கிலீஷ் ஓவன் மற்றும் க்ரீமிகா போன்ற பிரபலமான இந்திய பிராண்டுகளை உருவாக்கிய ரஜினி பெக்டர், குறைந்த பணத்துடன் தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது தாய் நிறுவனமான மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷலிட்டிஸ் லிமிடெட், 2023ஆம் ஆண்டு நிலவரப்படி சந்தையில் ரூ. 6681 கோடி மதிப்புடையது.

1940ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த ரஜினி, பிரிவினைக்குப் பிறகு தில்லிக்கு குடிபெயர்ந்தார். பதினேழு வயதில், அவர் திருமணமாகி லூதியானாவுக்கு குடிபுகுந்தார். அங்கு அவரது கணவர் குடும்ப வணிகத்தை நிர்வகித்தார். ரஜினி இதற்கு முன் உணவுத் துறையில் வேலை பார்த்ததில்லை. ஆனால் அவர் தனது லூதியானா வீட்டில் இருந்து ஐஸ்கிரீம் தயாரித்து விற்கத் தொடங்கினார்.

பின்னர் அவர் பிஸ்கட் மற்றும் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டார். அவர் இங்கிலீஷ் ஓவன் மற்றும் க்ரீமிகாவை நிறுவியபோது அவரது விடாமுயற்சி பலனளித்தது. ஊக்கத்தை விட பணம் முக்கியம் என்று நினைக்கும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அவரது வாழ்க்கை பெரும் உந்துதலாக விளங்குகிறது.

1989 ஆம் ஆண்டில், ரஜினி பெக்டரின் ஐஸ்கிரீம் வணிகமானது சந்தையில் மற்ற வணிகங்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்ட போதிலும், ஒரே நாளில் 50,000 ஐஸ்கிரீம்களை விற்று ஒரு குறிப்பிடத்தக்க எழுச்சியை அடைந்தது.

ரஜினி பெக்டரின் கணவரான தரம்வீர் பெக்டருக்குச் சொந்தமான குடும்ப வணிகமும் அவரது பேக்கரி விரிவடைந்தபோதும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால் அது 1984, மற்றும் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது, பெக்டர் குடும்பத்துக்கு மரண அச்சுறுத்தல் வந்தது.

அவரது மூன்று மகன்கள் உறைவிடப் பள்ளியில் நுழைந்த பிறகு, இல்லத்தரசியான ரஜினி பெக்டர் பேக்கிங்கில் தனது ஆர்வத்தைத் தொடர்ந்தார். அவர் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் பேக்கிங் படிப்பை படித்தார்.

தொழில் தொடங்கும் ஆர்வத்தில் பல்வேறு உணவுகளை பரிசோதிக்கத் தொடங்கினார். 1996 ஆம் ஆண்டில், மெக்டொனால்டு தனது நிறுவனமான மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷலிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தை நிரந்தர ரொட்டி சப்ளையராகத் தேர்ந்தெடுத்தது.

இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக, ரஜினி பெக்டர் கிரேட்டர் நொய்டாவில் ஒரு உற்பத்தி வசதியைத் திறந்து, நாடு முழுவதும் மேலும் பல கிளைகளை நிறுவினார். 2020 இல், அவரது நிறுவனம் ஒரு ஐபிஓவை அறிமுகப்படுத்தியது.


Story Written by: I.Jayachadran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+