சென்னை: கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ள நிலையில், ஐசிஐசிஐ வங்கியும் தனது டெபிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் புதிய கட்டணம், புதிய மாற்றம் போன்றவை அதிகப்படியான மக்களைப் பாதிக்க உள்ளது.
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் சில டெபிட் கார்டுகளுக்கு விமான நிலைய லவுஞ்ச் சேவையைப் பெறும் விதிமுறைகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1, 2024 முதல் லவுஞ்ச் சேவைகளை 2 முறை மட்டுமே இலவசமாகப் பெற முடியும். ஆனால் இதற்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 2024 காலாண்டில் ரூ.10,000 செலவிட்டு இருக்க வேண்டும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024 காலாண்டில் இலவச லவுஞ்ச் அணுகலைப் பெற, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் 2024 காலாண்டில் குறைந்தது ரூ.10,000 செலவிட வேண்டும். அதன் பின்னர் அடுத்தடுத்த காலாண்டுகளுக்கும் இதே விதிமுறை பொருந்தும் என்று விளக்கம் கொடுத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.
இந்த மாற்றத்தால் டெபிட் கார்டு பயனர்கள் தங்கள் செலவினங்களைத் திட்டமிட வேண்டியிருக்கும். விமான நிலையத்தில் லவுஞ்ச் சேவையைப் பயன்படுத்துவதைத் திட்டமிடுபவர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பெரும் பகுதிகளை விமானம் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும் இதேவேளையில் விமானச் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாமல் நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றனர், அதிலும் முக்கியமாகப் பிராந்திய விமான நிலையங்களில் உதாரணமாகச் சேலம், திருநெல்வேலி போன்ற விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இத்தகைய லவுஞ்ச் சேவைகள் பெரிய விமான நிலையத்தில் மட்டுமே இருக்கும் உதாரணமாகப் பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி போன்ற விமான நிலையத்தில் உள்ளது. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மக்கள் அதிகமாக இந்த லவுஞ்ச் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். சில கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை வைத்துள்ளவர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுவதால் அதிக எண்ணிக்கையில் இச்சேவையைப் பயன்படுத்தப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications