மும்பை: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான வைத்தியநாதன் தன்னுடைய தொண்டு நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர்.
இவர் ஆண்டுதோறும் தன் வசம் இருக்கும் பங்குகளை, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு வழங்கி உதவி செய்வார். அந்த வகையில் இந்த ஆண்டும் தன்னிடம் இருந்த 7 லட்சம் பங்குகளை 5 பேருக்கு வழங்கியுள்ளார்.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான வைத்தியநாதன், ஒழுங்குமுறை அமைப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், தன் வசம் வைத்திருக்கும் வங்கியின் பங்குகளை பரிசாக வழங்கியது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய 50,000 பங்குகளை சமீர் பாத்ரேவுக்கு வீடு வாங்குவதற்காக பரிசாக வழங்கியுள்ளார், அதேபோல தந்தையை இழந்த மயங்க் கோஷூக்கு 75 ஆயிரம் பங்குகளை வழங்கியுள்ளார். அதேபோல இரண்டு லட்சம் பங்குகளை ஓய்வு பெற்ற விமானப்படை வீர சம்பத்குமாருக்கு வழங்கியுள்ளார்.
மார்ச் 21ஆம் தேதிக்கு முந்தைய வாரத்தில் இந்த பரிசுகளை அவர் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல காணோஜியா என்பவருக்கு வீடு வாங்குவதற்காகவும், நண்பர் மனோஜ் சகாய்க்கும் தனது பங்குகளை இவர் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த பரிசுகள் மூலம் திரு. வைத்தியநாதனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித ஆதாயமும் பெறப்படவில்லை என்று ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு மதிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த பரிசுகளின் மொத்த மதிப்பானது 5.45 கோடி ஆகும்.
பெரு முதலாளிகளும், தொழிலதிபர்களும் தங்கள் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட பங்கை சமூக நலன் சார்ந்த பணிகளுக்காக வழங்குவது என்பது வாடிக்கையாக இருக்கிறது. அதில் குறிப்பாக ஐடிஎஃப்சி பேங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைத்தியநாதன், இவ்வாறு பரிசுகளை வழங்குவதில் தனித்துவமான ஸ்டைலை கொண்டவர்.
இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் தன்னிடமிருந்த 9 லட்சம் பங்குகளை 3. 95 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து ஐந்து பேருக்கு வழங்கினார். அவரது உடற்பயிற்சியாளர் மற்றும் வீட்டு வேலை செய்பவர் மற்றும் ஓட்டுநர் ஆகியோருக்கு அவர் இதை பரிசாக வழங்கினார்.
2020 ஆம் ஆண்டு தன்னுடைய பங்குகளை , 500 ரூபாய் கடன் வழங்கிய முன்னாள் கணித ஆசிரியர் ஒருவருக்கு வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தன் வசம் இருந்த 40% பங்குகளை வைத்தியநாதன் இது போல பரிசாக வழங்கியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications