பொதுவாக நாம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நிலையங்களில் தின்பண்டங்கள், குளிர் பானங்கள் போன்ற உணவு பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அதை நாம் எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். MRP விலைக்கும் கூடுதலாக பொருட்களை விற்பது, விதிமீறல் மற்றும் ஒரு குற்றமாகும். இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது, எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
கடைக்காரர் MRP-ஐ விட அதிக விலைக்கு பொருட்கள் விற்றால் என்ன செய்யலாம்!
அதிகபட்ச விலை (MRP)
இந்தியாவில் சட்ட அளவியல் சட்டம், 2009 இன் (Legal Metrology Act, 2009) படி, பொருளின் மீது அச்சிடப்பட்ட MRP என்பது வாடிக்கையாளர் ஒரு பொருளுக்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச விலையாகும்.
MRP என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் அதிகபட்ச விலையாகும். MRP என்பது ஒரு பொருளின் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரால் ஏற்படும் பிற செலவுகள் மற்றும் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்துதான் கணக்கிடப்படுகிறது.
புகார்
நீங்கள் பொருட்கள் வாங்கும் கடையில், அக்கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகமான விலையை வசூலிப்பதை உணர்ந்தால், கடை அமைந்துள்ள மாநிலத்தின் சட்ட அளவியல் துறையிடம் (Legal Metrology Department) உடனடியாக புகார் அளிக்கலாம்.
HelpLine எண்ணை தொடர்பு கொள்ளவும்!
நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் எண் - 1800-11-4000/ 1915 ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது அவர்களின் தனிப்பட்ட மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் மன்றத்தில் புகார் அளிக்கவும் வசதி உள்ளது.
ஒரு நுகர்வோர் 8800001915 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம் அல்லது NCH ஆப் மற்றும் Umang ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன்
கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகமாக வசூலித்தால், https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் நுகர்வோர் ஆன்லைனில் புகார் செய்ய முடியும். நேஷனல் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் என்பது வழக்குக்கு முந்தைய முதல் படியாகும்.
அபராதம் மற்றும் இழப்பீடு!
நீங்கள் புகார் செய்தும் பலனில்லை எனில் NCDRC இணையதளம், மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையம் போன்ற பொருத்தமான நுகர்வோர் ஆணையத்தை நேரடியாகவே அணுகலாம்.
விசாரணைக்குப் பிறகு விதிமீறல் கண்டறியப்பட்டால், அக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகைக்கு இழப்பீடு பெற நுகர்வோருக்கும் உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications