மும்பை: நீங்கள் திருமணமான இந்துவாக இருந்தால் உங்களால் கூடுதலாக வருமான வரி சேமிக்க முடியும் என பில்லியனியர் நிதின் காமத் கூறியுள்ளார். ஸெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நிதின் காமத் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வருமான வரி சட்டத்தின் பிரிவில் HUF - HINDU UNDIVIDED FAMILY, அதாவது பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் என ஒரு தனி பிரிவு உள்ளது. இந்த தனி பிரிவின் கீழ் தனி நபர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து வரிச்சலுகைகளையும் பெற முடியும் என ஸெரோதா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் காமத் கூறியுள்ளார்.

நீங்கள் திருமணமானவர், மேலும் நீங்கள் ஒரு இந்து என்றால் ஹெச்யுஎஃப் பிரிவை பயன்படுத்தி நீங்கள் சரியாக திட்டமிட்டு கூடுதல் வரிகளை சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்திய வருமான வரி சட்டத்தின்படி ஹெச்யுஎஃப் என்பது தனி அமைப்பாக கருதப்படுகிறது, எனவே நீங்கள் தனி ஆளாக ஒருபுறம் வருமான வரி விலக்கை பெறலாம், அதேபோல ஹெச்யுஎஃப் பிரிவின் கீழ் பிரிக்கப்படாத இந்து குடும்பமாகவும் வருமான வரி விலக்கை பெறலாம் எனக் கூறியுள்ளார்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சொத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் ஆகியவற்றை உங்கள் குடும்பத்திற்கு என்ன ஒரு தனியாக டீமேட் கணக்கு தொடங்கி ஹெச்யுஎஃப் -இன் கீழ் கணக்கு காட்டி வருமான வரி சலுகைகளை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்திய வருமான வரி சட்டத்தின் பிரிவு 2 (31)இன் படி, பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் ஒரு தனி நபராக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு என பான் எண் கொடுக்கப்படுகிறது. எனவே இதனை பயன்படுத்தி வருமான வரியை தாக்கல் செய்யலாம். ஒரு தனிநபருக்கான அனைத்து சலுகைகளும் இதில் கிடைக்கும். ஜெயின் மற்றும் சீக்கிய குடும்பத்தினர்களுக்கும் இது பொருந்தும் என இந்திய வருமான வரி சட்டம் கூறுகிறது.
நிதின் காமத்தின் எக்ஸ் தள பதிவுக்கு பல்வேறு பயனாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான இந்தியர்கள் இந்த பிரிவினை பயன்படுத்த தவறுவதாகவும் இது மிகப்பெரிய கேம் சேஞ்சர் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.
"திருமணமான இந்துக்களே இதனைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், வரி சேமிப்புக்கான ஒரு உத்தி மட்டுமல்ல, இது ஒரு கேம் சேஞ்சர்" என டேஸ் இன்ஃபோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அமீத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த பிரிவை பயன்படுத்தி உங்களது நிதி மேலாண்மையை வலுப்படுத்துவதோடு சிறந்த பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என கூறியுள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கேபிஎஸ் சிந்து "நான் எப்பொழுதுமே இதை கூறுவேன் ஒரு இந்து திருமணமான பிறகு உடனடியாக ஹெச்யுஎஃப் கணக்கை துவங்க வேண்டும். பொதுவாக ஒரு குழந்தை பிறந்தால் தான் இந்த கணக்கை துவங்க முடியும் என்ற ஒரு போலியான கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கு அவசியமில்லை சீக்கியர்கள் ஜெயினர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புத்திசத்தை பின்பற்றுபவர்கள் கூட இந்த பிரிவின் கீழ் பயனடையலாம்" என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications