டெல்லி: இந்தியாவின் உண்மையான ஜிடிபி விகிதம் நடப்பு நிதியாண்டில் 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் என்று, லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஐஹெச்எஸ் மார்கிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் புத்துயிர் நடவடிக்கைகள், பொருளாதாரத்தினை மேம்படுத்த கொஞ்சம் காலம் எடுக்கும் என்றும் அந்த அறிக்கைகள் கூறியுள்ளன.
நிதித் துறையில் நிலவி வரும் பலவீனமான போக்கு, பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து எடைபோட்டு வருகிறது.
உற்பத்தி விகிதம் வீழ்ச்சி
பொதுத்துறை வங்கிகளில் செயல்படாத சொத்துகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கடன்கள் தங்களது புதிய கடனைத் கட்டுப்படுத்துகின்றன என்று ஐஹெச்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதம் 4.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்த மந்த நிலையை தடுப்பதற்காக மத்திய அரசு அனைத்து அரசாங்க முயற்சிகளும் இருந்தபோதிலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
முதலீடு குறைந்து வருகிறது
நுகர்வு தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது. இது தொடர்ந்து தனியார் முதலீட்டை குறைத்து உலகளாவிய மந்த நிலையின் பின்னணியில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதிலும் ஜூன் காலாண்டில் இருந்து விஷயங்கள் மோசமடைந்துள்ளன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கு முன்பு 7.5 சதவிகிதமாக இருந்தது.
வளர்ச்சி குறையும்
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய, தொற்று விளைவுகளிலிருந்து அபாயங்கள் இருப்பதாக ஐஹெச்எஸ் கூறியுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பலவீனத்தைத் தொடர்ந்து, 2019 - 2020ம் நிதியாண்டில் வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும் சற்று குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன துறையில் மோசமான செயல்பாடு
எல்லாவற்றிற்கும் மேலாக வாகன உற்பத்தி மிகவும் பலவீனமான துறையாக உள்ளது. இந்திய வாகனத் துறையே ஒரு நெருக்கடியில் வீழ்ந்துள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவுகளில், கடந்த 12 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் 2.3 சதவிகித பங்கினை கண்டுள்ளது. 5 மில்லியனுக்கும் அதிகமாக மக்களைப் பயன்படுத்தும் இந்தியாவின் 57 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகனக் துறை மோசமான செயல் திறனைக் கண்டுள்ளது.
வேலை இழப்பு
ஒட்டுமொத்த வருவாய் வளர்ச்சி 10.1 சதவிகித வளர்ச்சி கண்ட, 1.79 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதன் விளைவாக 2019 - 2020ம் நிதியாண்டின் பாதியில் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். சுமார் 2 பில்லியன் டாலர் முதலீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் பிற்பாதியில் இத்துறை மீண்டு வருவதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் இந்த விகிதமானது நிலவி வரும் காலாண்டுகளிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் மொத்த உற்பத்தி விகிதமும் குறைய வாய்ப்பிருக்கிறது.