மும்பை: ரேமண்ட் குழும தலைவராக இருக்கும் கௌதம் சிங்கானியாவுக்கு மனைவியுடனான விவாகரத்து பிரச்னை பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கௌதம் சிங்கானியா ரேமண்ட் குழுமத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். விரைவில் ரேமண்ட் குழுமத்தின் வாரிய உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
இம்மாத இறுதியில் நடைபெறும் கூட்டத்தில் மீண்டும் கௌதம் சிங்கானியாவே ரேமண்ட் குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் நிறுவன முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் அமைப்பு ஆண்டு வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் கெளதம் சிங்கானியாவை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு எதிராக வாக்களிக்கும் படி பங்குதாரர்களை வலியுறுத்தியுள்ளது.
கௌதம் சிங்கானியா மற்றும் அவரது மனைவி நவாஸ் மோடி இடையிலான விவாகரத்து வழக்கில் இன்னும் தீர்வு எட்டப்படாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். கௌதம் சிங்கானியா 1999 ஆம் ஆண்டு நவாஸ் மோடி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கௌதம் சிங்கானியா தங்களது குடும்பத் தொழிலான ஜேகே குரூப் ஆஃப் கம்பெனிஸில் 1986 ஆம் ஆண்டு நுழைந்தார். 1990 ஆம் ஆண்டு ரேமண்ட் குழுமத்தின் இயக்குனராக தன்னுடைய பணியை தொடங்கினார்.
அன்று முதல் தற்போது வரை அவர் இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு தொழில் ரீதியாகவும் அவருக்கு பிரச்சனையை உருவாக்க தொடங்கியுள்ளத.
நிறுவன முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் அமைப்பு,ரேமண்ட் வாரிய உறுப்பினர்கள் குழுவில் இருந்து சிங்கானியாவை நீக்குவதற்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.
தற்போது கௌதம் சிங்கானியாவிற்கும் அவரது மனைவி நவாஸ் மோடிக்கும் இடையே உள்ள விவாகரத்து பிரச்சினைகள் முடிந்து தீர்வு எட்டப்படும் வரை இருவரையுமே குழுவில் இருந்து நீக்குவது தான் நிறுவனத்திற்கு நன்மை அளிப்பதாக அமையும் என தெரிவித்துள்ளது.
நவாஸ் மோடி, கௌதம் சிங்கானியா மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு குழுமத்தின் சில நிறுவனங்களில் இருந்து நவாஸ் மோடி நீக்கப்பட்டார். அதற்கு கௌதம் சிங்கானியாவின் சதி தான் காரணம் என அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்சனையில் நிறுவனம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பங்குதாரர்கள் , இருவரையும் வாரியத்தில் இருந்து நீக்குவது தான் சரியானதாக இருக்கும் என்பது நிறுவன முதலீட்டாளர் ஆலோசனை சேவைகள் அமைப்பின் பரிந்துரை. ஆனால் வாரிய உறுப்பினர்கள் என்ன முடிவினை எடுப்பார்கள் என்பது இந்த மாத இறுதியில் தெரிய வரும்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications