ஐஐடி பாம்பே சமீபத்தில் தனது வருடாந்திர வேலை வாய்ப்பு சுற்றுகளை தனது மாணவர்கள் மத்தியில் நடத்தியது, இதில் யாரும் எதிர்பார்க்காத வரையில் 3.7 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளமும், சர்வதேச வேலைவாய்ப்பை ஒரு மாணவர் தட்டிச்சென்றுள்ளார். இதேபோல் உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிகப்படியாக வருடம் 1.7 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஐஐடி பாம்பே கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடந்திர சம்பளம் 2.1 கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 3.7 கோடி ரூபாய் சம்பளம் என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டில் உள்நாட்டு சம்பளமாக 1.8 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 1.7 கோடி ரூபாய் அளவில் குறைந்துள்ளது. கொரோனா தொற்று கால பாதிப்பில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூ தேர்வு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல் வர்த்தக சந்தை பாதிப்பால் இந்தியாவில் சம்பள அளவுகள் பாதித்துள்ளது என்பதும் தெரிகிறது.
ஐஐடி பாம்பே கல்லூரியின் கேம்பஸ் வேலைவாய்ப்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அதிகப்படியான மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதேபோல் இந்த வருடம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் சராசரி சம்பளம் கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களை விட சற்று அதிகமாக உள்ளது.
ஐஐடி பாம்பே கல்லூரியின் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சீசனுக்கான சராசரி சம்பளம் (CTC) ஆண்டுக்கு ரூ.21.8 லட்சமாக இருந்தது. இது முந்தைய இரண்டு ஆண்டுகளில், 2021-22 மற்றும் 2020-21ல் ரூ.21.5 லட்சம் மற்றும் ரூ.17.9 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி பாம்பே கல்லூரியின் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சீசனில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் சுமார் 16 பேருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதோடு மொத்தம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு 194 மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 65 சர்வதேச வேலைவாய்ப்புகளும் அடங்கும், ஒரு சில மாணவர்கள் ஒன்றுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் இருந்து வந்துள்ளன.
ஐஐடி பாம்பே இரண்டு கட்டங்களாக வேலை வாய்ப்புகளை நடத்துகிறது, முதலாவது டிசம்பரில் மற்றும் இரண்டாவது ஜனவரி மற்றும் ஜூன்/ஜூலை இடையே.
இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சீசனில் 97 கோர் இன்ஜின்யரிங் நிறுவனங்கள் சுமார் 458 மாணவர்களை துவக்க நிலை பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்த வருடம் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு நிறுவனமாக இருந்தது.
ஐடி துறை சுமார் 88க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 302 மாணவர்களுக்கு வேலைகளை வழங்குவதன் மூலம், இரண்டாவது பெரிய ஆட்சேர்ப்பு நிறுவனமாகத் தொடர்ந்து உள்ளது. இருப்பினும், ஐடி மற்றும் மென்பொருள் பணியமர்த்தல் முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது.
மேலும் ஐஐடி பாம்பே கல்லூரியில் B.Tech, dual-degree மற்றும் M.Tech மாணவர்களில், வேலை வாய்ப்புகளில் பங்கேற்பவர்களில் கிட்டத்தட்ட 90% பேர் வேலைகளைப் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 2022-23 வேலை வாய்ப்புப் சீசனில் மொத்த மாணவர்களில் 82% பேர் அதாவது 1,845 பேரில் 1,516 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications