வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மிகவும் விருப்பமான முதலீட்டு தளமாக இருக்கும் வேளையில், தற்போது ஸ்வீடன் நாட்டின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை அறிவிக்க தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கான ஸ்வீடன் நாட்டு தூதரான ஜான் தெஸ்லெஃப் புதன்கிழமை 15 பேர் உடன் தொழிற்துறை அமைச்சரை சந்தித்தார். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் தெஸ்லெஃப் தமிழ்நாட்டில் ஐகியா, டிரெல்லெபோர்க் மரைன் சர்வீசஸ் (Trelleborg Marine Services), சேப் (SAAB) மற்றும் கேம்ஃபில் (Camfil) உள்ளிட்ட நான்கு முக்கிய ஸ்வீடன் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தளத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதில் ஐகியா கடைகள் பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் திறக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாட்டில் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு இந்த சந்திப்பு விடையாக மாறியுள்ளது. அமைச்சர் டிஆர்பி ராஜா உடனான சந்திப்பு மூலம் விரைவில் ஐகியா சென்னை புறநகர் பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது, 70 ஸ்வீடின் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றது, இந்த நிறுவனத்தில் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஸ்வீடன் அரசு தமிழ்நாடு உடனான பொருளாதார கூட்டணியை கூடுதலாக வலுப்படுத்த, கூடுதல் முதலீடுகளை செய்யும் நோக்கம் கொண்டுள்ளது என ஜான் தெஸ்லெஃப் தெரிவித்தார்.
புதிதாக 4 ஸ்வீடன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை தாண்டி, சென்னையில் உள்ள ஸ்காண்டினேவியன் ரோபாட்டிக் சிஸ்டம்ஸ் மற்றும் கோவைவில் உள்ள ஜாகோபி ஆகிய நிறுவனங்கள் தங்கள் புதிய தொழிற்சாலைகளை 2025 ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் திறக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த விரிவாக்கங்களும், திட்டமிடப்பட்டு வரும் புதிய முதலீடுகளும் ஸ்வீடன் நாட்டின் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் வணிக சூழல் மற்றும் உற்பத்தி மையமாக அதன் திறன் மீது வைத்திருக்கும் தீவிரமான நம்பிக்கையை காட்டுகிறது. இதேபாதையில் தான் தற்போது சீனாவில் இருக்கும் தைவான் நிறுவனங்களும் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் படையெடுக்க துவங்கியுள்ளது.
இந்தியாவுக்கான ஸ்வீடன் நாட்டு தூதரான ஜான் தெஸ்லெஃப் தெஸ்லெஃப் தலைமையிலான 15 பேர் கொண்ட ஸ்வீடிஷ் வர்த்தக துறையை சேர்ந்த முக்கிய குழு தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பொருட்டு, அவர்களுடைய திட்டத்தையும்ஸ ஆர்வத்தையும் சென்னையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களை நேரில் சந்தித்து விளக்கினர்.
ஸ்வீடின் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை இந்தியாவுக்கான உள்நாட்டு வர்த்தகத்தை பூர்த்தி செய்யும் சந்தையாக பார்க்காமல், ஏற்றுமதிக்கான முக்கிய இடமாகவும் தமிழ்நாட்டை நம்புகிறது. இதன் வெளிப்பாடே அடுத்தடுத்த முதலீடுகளுக்கான பேச்சுவார்த்தை.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications