இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தன்னுடைய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைகளால் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது . டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட ஐடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் ஊழியர்களின் இரண்டு சதவீதம் பேர் அதாவது 12 ஆயிரம் பேரை இந்த நிதியாண்டுக்குள் வேலையில் இருந்து நீக்க இருப்பதாக டிசிஎஸ் அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது, ஊழியர்களை மிரட்டுகிறது என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஊழியர்கள் அவமானப்படுத்தப்படுவதாகவும் தவறாக நடத்தப்படுகின்றனர் என்றும் ஐடி ஊழியர்களுக்கான சங்கமும் புகார் அளித்த வண்ணம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலை குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடிய எம்பி ராஜா ராம் சிங் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கேட்டு இருக்கிறார். டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்க வேண்டிய பெயரில் முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு இருக்கும் அவர் , அரசு இந்த விவகாரத்தில் கட்டாயம் தலையிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி மத்திய தொழில்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கும் அவர், டிசிஎஸ் 12 ஆயிரம் ஊழியர்களை வேலையில் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது ஆனால் உண்மையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஊழியர்களின் நலனை பின்னுக்கு தள்ளிவிட்டு லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனங்கள் செயல்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கும் அவர் சமகாலத்திற்கான திறன்கள் இல்லாத ஊழியர்களே பணிநீக்கம் செய்வதாக நிறுவனங்கள் பணி நீக்கத்தை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறார்.
2024 -25ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனமே தங்கள் ஊழியர்களில் 91% பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனங்கள் எப்படி செயல்பட முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் அரசு ஏன் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது என வினவியுள்ளார்.
பெரிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தால் அரசுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது ஆனால் எந்த ஒரு ஐடி நிறுவனமும் இதனை பின்பற்றவில்லை என சாடி இருக்கும் அவர் 2024ஆம் ஆண்டில் மட்டும் 1.5 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். ஐடி ஊழியர்களுக்கான சங்கமும் எம்பி ராஜா ராம் சிங்கின் இந்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications