இந்திய வானிலைத் துறை (IMD) பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது, கனமழை மற்றும் இடி மின்னல் கூடிய மழை வரும் என எச்சரிக்கை அளித்துள்ளது. பெங்களூர் நகர மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை மற்றும் வலுவான காற்றுக்கு இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது.
இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல் மற்றும் மழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது என எக்னாமிக் டைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

பெங்களூருக்கும், பெங்களூர் மக்களுக்கும் மழை புதியது இல்லை என்றாலும், மழையால் எற்படும் விளைவுகள் கடுமையான பாதிப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஏற்கனவே மோசமாக இருக்கும் பெங்களூர் டிராபிக், மழையாலும், சாலையில் தண்ணீர் தேங்குவதாலும் இன்னும் மோசமாகும். இதுமட்டும் அல்லாமல் பெங்களூரில் பல பகுதிகள் மழைநீர் தேங்கும் பிரச்சனை இருப்பதாலும், பல வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயமும் உள்ளது என்பது மற்றொரு முக்கியமான விஷயமாக உள்ளது.
IMD-வின் சமீபத்திய அறிக்கைப்படி, பெங்களூர் நகரம் மற்றும் இதை சுற்றியுள்ள கிராமப்புறங்கள், சிக்கபள்ளாப்பூர், கோலார், துமகூர், ராமானகரா ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் இடி உடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதியில் மழையுடன் சுமார் 30-40 கிமீ/மணி வேகத்தில் வலுவான காற்று வீசும் எனவும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மரங்கள் உடைந்து விழவும் வாய்ப்புள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
பள்ளாரி மற்றும் விஜயநகரா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கும் வலுவான காற்றுடன் சாத்தியம் உள்ளது. இந்த கணிப்பு, தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த அழுத்தம் மூலம் ஏற்படும் என்று IMD விளக்குகிறது.
More From GoodReturns

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications