சென்னை: சர்வதேச நாணய நிதியம் (IMF) புதன்கிழமை வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி கணிப்பில் வியக்க வைக்கும் வகையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆசிய நாடுகளின் ஆதிக்கம் தான்.
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் எப்போதும் மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வேளையில், மார்ச் 6 ஆம் தேதி வெளியான ஐபிஎன் கணிப்பு மொத்த கதையும் மாற்றியுள்ளது.

ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் என்று கணித்துள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து சீனா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் பெரும் பங்கீட்டைக் கொண்டு இருக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் எந்த அளவு என்பதில் தான் அதிர்ச்சி.
இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நான்கு நாடுகள் அடுத்த 5 வருடத்தில் பதிவாகும் உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்தில் பாதிக்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கும் என்று ஐஎம்எப் எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2023ல் செப்டம்பர் மாதம் ஐஎம்எப் அமைப்பு செய்த இதேபோன்ற கணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் அதிக ஜிடிபி கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 3வது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணிப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பிற நிறுவனங்கள் செய்த சமீபத்திய கணிப்புகளுடன் ஒத்துப்போகிறது. இந்த கணிப்புகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைக் காணும் என்பதைத் தொடர்ந்து உறுதி செய்கிறது.
இந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது உள்நாட்டுக் கடன் வரம்பு அதிகரிப்பு, உள்கட்டமைப்பு செலவுகளில் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் குறைவது ஆகியவை இருக்கும் என்று கூறப்பட்டாலும் ரூபாய் மதிப்பு, வர்த்தக பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் எண்ணிக்கை ஆகியவை தொடர்ந்து இந்தியாவுக்குப் பிரச்சனையாக இருப்பதை மறந்துவிடக்கூடாது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications