பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் புதிதாக ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. இதன் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் தன்னுடைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக ஒரு புறம் சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடன் பெறுவது, மறுபுறம் முதலீடுகளை ஈர்ப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடைய பாகிஸ்தான் முதலீடு செய்யும் நாடுகளுக்கு வரி சலுகை உள்ளிட்ட சிறப்பு உதவிகளை வழங்க கூடாது என தெரிவித்துள்ளது.

அதாவது சிறப்பு ஒப்பந்தங்கள் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு சலுகையுடன் தொழில் பூங்காக்களை அமைத்து தர கூடாது என கூறியுள்ளது. சீனா இந்த நடைமுறையை கொண்டு தான் பாகிஸ்தானில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. தற்போது ஐஎம்எஃப் இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ஆம் தேதியிட்டு சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஏற்கனவே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் புதிதாக அமைக்கப்படும்.
பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவது, மானியங்களை வழங்குவது உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. இதன் மூலம் அனைத்து நாடுகளும் முதலீடு செய்வதற்கு ஒரு சமமான வாய்ப்பு உருவாகும் என ஐஎம்எஃப் தெரிவிக்கிறது.
அண்மையில் தான் பாகிஸ்தான் பிரதமர் சீன நிறுவனங்களை பாகிஸ்தானில் ஆலைகளை நிறுவி முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் 9 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பணிகள் அனைத்தும் தற்போது பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஐஎம்எஃப் இப்படி ஒரு நிபந்தனையை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.
பாகிஸ்தானுக்கான ஐஎம்எஃப் திட்டத்தின் தலைவரான நாதம் போர்ட்டர் அனைத்து நாடுகளும் எளிமையாக வந்து தொழில் தொடங்கும் வகையில் ஒரு சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சலுகைகளை தருவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அண்மையில் தான் பாகிஸ்தான் ஐஎம்எஃப் இடம் இருந்து 7 பில்லியன் டாலர் அளவிலான கடனை பெற்றுள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுமார் 100 சீன நிறுவனங்களை தங்களது தொழில் பூங்காக்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications