சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வங்கித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதில் சில முக்கிய கட்டுப்பாடுகளும் அடங்கும். அந்த வகையில் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC), கடந்த மே 8ஆம் தேதி ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தது. அதன்படி ஒரு நபர் ரூ. 20,000 ரூபாய்க்கு மேல் கடனை ரொக்கமாக பெற முடியாது என்று அறிவித்தது. அதேபோல இந்த நடைமுறையை கண்டிப்பாக NBFC நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
கடந்த மே 8ஆம் தேதி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதன்படி வருமான வரிச் சட்டம் 1961 கீழ், பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி கடன் பெறும் ஒரு நபர் ரூ. 20,000 மேல் கடனை ரொக்கப் பணமாக பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல ரொக்க பரிமாற்றத்தின் போது வருமானவரித்துறை வழங்கும் உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் NBFC நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இது பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் பண அடிப்படையிலான நடைமுறைகள் தொடர்புடைய அபாயங்களை குறைப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. இதனால் பயன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து பார்ப்போம். தங்க கடன்களை பெரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000 ரொக்கமாக கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தும் போது ஆரம்பத்தில் சில சவால்களை ஏற்படுத்தலாம். பாரம்பரியமாக பல கடன் வழங்குபவர்களும் அவர்களின் வசதி மற்றும் உடனடித் தன்மை காரணமாக ரொக்கப் பட்டுவாடாக்கள் செய்தனர். இருப்பினும் ரிசர்வ் வங்கி உத்தரவின்படி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகள் மற்றும் மின்னணு பரிமாற்றங்களை பெறுவதற்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரொக்க பணமாக செலுத்துவதால், வாடிக்கையாளர்கள் வெளியில் பணத்தை எடுத்துச் செல்லும்போது திருட்டு, மோசடி போன்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுவே வங்கி கணக்கில் செலுத்தும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது சற்று குறைய தான் செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்வதை விட வங்கி கணக்கில் செலுத்துவது, இன்னும் பாதுகாப்பானது.
நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த செயல் முறையை நடைமுறைப்படுத்த தகுந்த தொழில்நுட்பத்தோடு உள்ளனர். இதனால் வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் பணத்தை செலுத்துவது அவ்வளவு பெரிய வேலையாக நிதி நிறுவனங்களுக்கு இருக்காது. இருப்பினும் வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்றவர்களுக்கு ஆரம்பத்தில் இது சிக்கலாக இருக்கலாம். ஆனால் மிகவும் பாதுகாப்பான முறையாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது இருக்கிறது முதலில் இந்த நடைமுறை கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம் தானே!
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications