வீட்டு கடன் ஈஎம்ஐ.. எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்..!

சென்னை: இன்று நாட்டில் உள்ள பலரும் ஏதோ ஒரு கடனை பெற்று EMI செலுத்தி வருகின்றனர். அது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு கடனை பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல. நீங்கள் தேவையான ஆவணங்களை ஒப்படைத்து மேலும், கடன் வழங்குபவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். அதேபோல் கடன் பெற்ற பிறகு, அதனை சரிவர திருப்பிச் செலுத்த வேண்டும்.

எனவே இந்தப் பதிவில் உங்கள் வீட்டுக் கடன் EMIகளை தாமதம் இன்றி செலுத்துவது எவ்வளவு முக்கியமானது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வீட்டு கடன் ஈஎம்ஐ.. எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்..!

கிரெடிட் ஸ்கோரைப் பாதுகாத்தல்: உங்கள் EMI-களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, உங்கள் கடன் வரலாற்றை சரிவர பராமரிக்க மிக முக்கியமானதாகும். Cibil, Experian போன்ற கிரெடிட் நிறுவனங்கள், உங்களின் கடன் பரிவர்த்தனைகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

நீங்கள் எவ்வளவு பொறுப்புடன், உங்களது கடனை திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள்.. என்பதை பொறுத்தே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் இருக்கும். நீங்கள் நேரத்திற்கு அதனை செலுத்தி இருந்தால் அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருக்கும். கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று எழுத்து எண் ஆகும். அவை 300 முதல் 900-க்குள் இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால், பிற்காலத்தில் நீங்கள் கடன் பெறுவது சுலபமாக இருக்கும்.

அபராதக் கட்டணங்களைத் தவிர்க்கலாம்: வங்கிகள் மற்றும் கடன் தந்த நிதி நிறுவனங்கள், பொதுவாக EMIகளை தாமதமாகச் செலுத்துவதற்கு அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிக்கின்றன. இந்த அபராதங்களில் தாமத கட்டணம், அதிகரித்த வட்டி விகிதங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். உங்கள் EMIகளை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் இந்த தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்கலாம்.

எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்: தாமதமான அல்லது தவறவிட்ட EMI, உங்களின் ஒட்டுமொத்த நிதி வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அபராதங்கள் மற்றும் வட்டி கட்டணங்கள் கூடுவதால், நீங்கள் பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். மேலும் தவறவிட்ட இரண்டு, மூன்று EMIகளை சேர்த்து செலுத்துவது, மாத சம்பளக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். எனவே சரியான நேரத்தில் EMI செலுத்துவது, உங்கள் வீடுகளை கடன் தருபவர்கள் கைப்பற்றும் அபாயத்திலிருந்து, உங்களை பாதுகாக்கிறது.

மன அமைதி: வீட்டுக் கடன் EMIகள் போன்ற நிதி கடமைகளைச் சரிவர நிர்வகிக்கும் போது மன அழுத்தங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட முடியும். ஏனெனில், EMIகளை சரியான நேரத்தில் செலுத்தாமல் இருந்தால், அதை நினைத்துக் கொண்டு பலர் கவலையில் மூழ்கி விடுவர். எனவே இதனை பொறுப்புடன் செய்யும்போது உங்கள் வீடு பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மன அமைதியைப் பெற முடியும். மேலும் கடன் சுமை இல்லை என்பதை மனதில் கொண்டு உங்கள் வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் உங்களால் கவனம் செலுத்த முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+