மார்ச் மாதம் என்றாலே தொழில் செய்பவர்கள் முதல் மாத வருமானம் பெறுபவர்கள் வரை அனைவருக்கும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் நிதியாண்டு முடிவடையும் மாதம் தான் மார்ச் மாதம். நீங்கள் உங்கள் ஆதார்-பான் கார்டு இணைப்பு தொடங்கி, வருமான வரியை சேமிக்கவும் இந்த மாதம் தான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.
அந்த வகையில் மார்ச் மாதத்திற்குள் மக்கள் அனைவரும் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஆதார்-பான் இணைப்பு!
ஆதார் எண்ணுடன் உங்கள் பான் எண்ணை இணைப்பது மிகவும் முக்கியம். மார்ச் 31 க்குள் நீங்கள் பான் உடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால் உங்களால் வருமான வரியை செலுத்த முடியாது. உங்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க இதுவே கடைசி வாய்ப்பு. மார்ச் 31 க்குள் இணைத்து அதிக வரி மற்றும் அபராதம் செலுத்துவதை தவிர்க்கலாம்.
அனைத்திற்கும் மேலாக மார்ச் 31-க்குள் இணைக்காவிடில் பான் கார்டு இயங்காது, அரசால் ரத்து செய்யப்படும்.
வரி சேமிப்பு!
நீங்கள் அதிக வரியிலிருந்து தப்பிக்க இம்மாத இறுதிக்குள் வருமான வரியை சேமிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய இதுவே கடைசி மாதமாகும். NPS, PPF, செல்வமகள் சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரி விலக்கை பெறலாம்.
அட்வான்ஸ் டாக்ஸ்
2022-2023 நிதியாண்டிற்கான முன்கூட்டிய வரி செலுத்துதலின் இறுதித் தவணையைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி மார்ச் 15, 2023 ஆகும்.
மார்ச் 15 ஆம் தேதிக்குள் 100 சதவீத முன்கூட்டிய வரி அதாவது
அட்வான்ஸ் டாக்ஸ்-ஐ வரி செலுத்துவோர் செலுத்த வேண்டும். வருமான வரித் துறையின்படி, வரி செலுத்துபவரின் மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பு 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தால் வரிப் பொறுப்பை முன்கூட்டிய வரி வடிவில் செலுத்த வேண்டும். மேலும், மார்ச் 31 வரை செலுத்தப்படும் எந்த வரியும் முன்கூட்டிய வரியாகக் கருதப்படும்.
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா!
இதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் முதலீடு செய்தால் அவர்களுக்கு அரசிடமிருந்து ஓய்வூதியம் கிடைக்கும். நீங்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய இதுவே கடைசி வாய்ப்பாகும்.
ஏனெனில் மார்ச் 31 உடன் இத்திட்டம் முடிவடைவதாக அரசு அறிவித்துள்ளது. எனவே மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டத்தில் முதலீடு செய்து அரசின் ஓய்வூதியத்தை பெற உடனே முதலீடு செய்யுங்கள்.
மேலும் இதில் முதலீடு செய்ய அதிகபட்ச நுழைவு வயதுக்கு எவ்வித வரம்பும் இல்லை. அதேசமயம் இத்திட்டத்தின் கீழ் ஒரு மூத்த குடிமகன் அவர்களின் மொத்த பாலிசி தொகை ரூ.15 லட்சத்தை தாண்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட்!
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலிடுகளில் இன்னும் உங்கள் நாமினியை சேர்க்கவில்லை என்றால், உங்கள் நாமினியை இணைக்க மார்ச் 31 கடைசி நாளாகும். மார்ச் 31 க்குள் நாமினியைச் சேர்க்கவில்லை என்றால், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் முடக்கப்படும் என்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்சூரன்ஸ் பாலிசி!
நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் வெளியிட்ட பட்ஜெட்டில், 5 லட்சத்திற்கும் மேலான வருடாந்திர பிரிமீயம் கொண்ட LIC பாலிசிக்கு இனி வரி விலக்கு பலன் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறை ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications