பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எந்த யோசனையும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாறாக, வங்கிகளின் நிதி வலுவூட்டலுக்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளை (PSU Bank) இணைக்கும் திட்டம் அரசின் முன் இல்லை என்று மத்திய அரசு ராஜ்யசபாவில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த வங்கிகளின் நிதி அதிகாரம் பெற நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். வங்கித் துறையில் அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. இது வங்கியின் மூலதன போதுமான விகிதத்தையும் (CAR) மற்றும் செயல்படாத கடன்களையும் மேம்படுத்தியுள்ளது என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 2019-ல் வங்கி அமைப்பில் பெரிய முன்னேற்றங்களைக் கண்டது. இதனால், நான்கு பெரிய வங்கிகளை இணைக்கப்பட்டது. எனவே 2017ல் இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12 ஆக குறைந்தது. இந்த இணைப்பு அரசு வங்கிகளை உலகளாவிய வங்கிகளாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை ஏப்ரல் 1, 2020 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டில், தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடாவில் இணைக்கப்பட்டன. பாரதீய மகிளா வங்கி மற்றும் 5 வங்கிகள் எஸ்பிஐயுடன் இணைக்கப்பட்டன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எஸ்பிஐ அதன் பிறகும் சில வங்கிகள் இணைப்பு குறித்து அடிக்கடி வதந்திகள் வந்தன. தற்போது இதற்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications