கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வரும் வேளையில் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைச் சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும், தற்போது இருக்கும் வர்த்தகத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும் ஊழியர்களை அதிகளவில் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமும் முழுவதும் வர்த்தகப் போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் வர்த்தகத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது பெரும் போட்டியாக உள்ளது. இந்த நிலையில் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், ஊக்குவிக்கவும் முக்கியமான முடிவை அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள்
அமெரிக்க நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு அதிகப்படியான சம்பள உயர்வைத் தனது ஊழியர்களுக்கு அளிக்கத் தயாராகி வருகிறது. இதன் மூலம் ஊழியர்களை நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள்வது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்க முடியும்.
3.9% சம்பள உயர்வை
2008க்குப் பின் அமெரிக்க நிறுவனங்கள் 2022ல் தனது ஊழியர்களுக்கு 3.9 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை அளிக்க நிறுவனங்கள் தயாராகி வருகிறது. இதேவேளையில் இந்த ஆண்டுப் புதிய வேலைவாய்ப்புக்கு மாறியவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஐடி துறை
குறிப்பாக இந்தியாவில் ஐடி துறையில் திறன் வாய்ந்த டெக் ஊழியர்களுக்கு அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் கிட்டதட்ட 100 சதவீதம் வரையிலான சம்பள உயர்வைக் கொடுத்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகின்றனர்.
சம்பள உயர்வு
இதேபோல் ஏற்கனவே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பள உயர்வும், பதவி உயர்வு, போனஸ் எனப் பல சலுகைகளை அளிப்பதாக இந்திய ஐடி நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இது ஐடி துறைக்கு மட்டும் அல்லாமல் பிற துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கும் கிட்டதட்ட அதே அளவிலா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலி தற்போது அமெரிக்காவிலும் எதிரொலித்துள்ளது.
தி கான்பிரென்ஸ் போர்டு
அமெரிக்காவில் முன்னணி திங்க் டேங்க அமைப்பான தி கான்பிரென்ஸ் போர்டு என்ற அமைப்பு செய்த ஆய்வில் 49 சதவீத நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளத்தை அளிக்கத் தயாராகியுள்ளது, 39 சதவீத நிறுவனங்கள் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் காரணம் காட்டி கூடுதலான சம்பள உயர்வை அளிக்கும் திட்டத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா-வுக்குப் பின்
கொரோனா-வுக்குப் பின்பு ஆரம்பக்கட்ட ஊழியர்கள் வேறு வேலைவாய்ப்புக்கும், அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலைக்கும் செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் உலகம் முழுவதும் நிறுவனங்களின் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் அதிகமாகவே உள்ளது.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications