உலகிலேயே முதல் முறையாக ஜெர்மனி ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவையை சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதால் புவி வெப்பமாகி வருவதை முற்றிலும் தடுக்க முடியும் என்றும் இந்த ரயில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்றும் ஜெர்மனி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜெர்மனியை அடுத்து இந்தியாவிலும் விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை இந்தியா உருவாக்கி வருவதாகவும், அவை 2023ஆம் ஆண்டு தயாராகும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜனை ரயில் எரிபொருளாக பயன்படுத்துவதால், பூஜ்ஜிய கார்பன் இலக்குகளை ஆதரிப்பது உட்பட பல நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் ஹைட்ரஜன் ரயில்
இதுவரை ஜெர்மனி மட்டுமே ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு ஜெர்மனி உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்தியது. பிரெஞ்சு நிறுவனமான Alstom ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 14 ரயில்களை சுமார் $92 மில்லியன் செலவில் உருவாக்கி ஜெர்மனிக்கு அளித்துள்ளது.
ரயில் எரிபொருள்
இந்த நிலையில் புவனேஸ்வரில் உள்ள SOA பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியன் இரயில்வே, ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் டீசல் ரயில்களுக்கு பதில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து ஜெர்மனியை அடுத்து ஹைட்ரஜன் எரிபொருளை வைத்து ரயிலை இயக்கும் நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
மேலும் இந்த விழாவில் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமானது என்றும், இது உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ரயில்கள் சோதனை ஓட்டத்தில் வெற்றிகரமாக இயங்கியது என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
வேகம்
வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் 52 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டியது என்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications