உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவின் அதானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பார்த்தோம். விரைவில் அவர் இரண்டாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் 2030ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக மும்பை மற்றும் துபாய் ஆகிய இரண்டு பகுதிகளில் உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட பகுதியாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030ல் கோடீஸ்வரர்கள்
துபாய், மும்பை மற்றும் ஷென்சென் ஆகிய பகுதிகளில் 2030 ஆம் ஆண்டுக்குள் பணக்கார நகரங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இந்த மூன்று நகரங்களும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிக மில்லியனர்களைக் கொண்ட முதல் 20 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியனர்கள்
ஹென்லி & பார்ட்னர்ஸ் குழுமம் வெளியிட்ட 2022 ஆம் ஆண்டின் காலாண்டு குடிமக்கள் அறிக்கையின்படி ஒரு மில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களை வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது
துபாயில் மில்லியனர்கள்
துபாய் தற்போது அதிக மில்லியனர்களை கொண்ட பகுதியாக உள்ளது என்பதும், துபாய் இதில் உலகளவில் 23வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 67,900 மில்லியனர்கள், 13 பில்லியனர்கள் துபாயில் உள்ளனர்.
மும்பையில் மில்லியனர்கள்
இந்திய நகரமான மும்பையில் 60,600 மில்லியனர்கள் மற்றும் 30 பில்லியனர்கள் உள்ள நிலையில் உலக அளவில் மும்பை அதிக மில்லியனர்கள் கொண்ட பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது.
துபாய், மும்பையை அடுத்து சீன நகரமான ஷென்சென் தற்போது 30வது இடத்தில் உள்ளது. இங்கு 17 பில்லியனர்கள் மற்றும் 43,600 மில்லியனர்கள் உள்ளனர். இந்த நகரம் சீனாவின் ஹைடெக் தலைநகரமாக காணப்படுகிறது
அதிக மில்லியனர்களைக் கொண்ட 20 நகரங்கள்
துபாய், மும்பை மற்றும் ஷென்சென் ஆகிய மூன்று நகரங்களும் எதிர்காலத்தில் செல்வ செழிப்பான நகரங்களாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களைக் கொண்ட முதல் 20 நகரங்கள் பின்வருமாறு:
1.நியூயார்க் (345,600 மில்லியனர்கள்)
2. டோக்கியோ (304,900 மில்லியனர்கள்)
3.சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி (276,400 மில்லியனர்கள்)
4. லண்டன் (272,400 மில்லியனர்கள்)
5.சிங்கப்பூர் (249,800 மில்லியனர்கள்)
6. லாஸ் ஏஞ்சல்ஸ் (192,400 மில்லியனர்கள்)
7.சிகாகோ (160,100 மில்லியனர்கள்)
8. ஹூஸ்டன் (132,600 மில்லியனர்கள்)
9. பெய்ஜிங் (131,500 மில்லியனர்கள்)
10. ஷாங்காய் (130,100 மில்லியனர்கள்)
11.சிட்னி (129,500 மில்லியனர்கள்)
12.ஹாங்காங்(125,100 மில்லியனர்கள்)
13. பிராங்பேர்ட் (117,400 மில்லியனர்கள்)
14. டொராண்டோ (116,100 மில்லியனர்கள்)
15.சூரிச் (105,100 மில்லியனர்கள்)
16. சியோல் (102,100 மில்லியனர்கள்)
17.மெல்போர்ன் (97,300 மில்லியனர்கள்)
18.டல்லாஸ் & ஃபோர்ட் வொர்த் (92,300 மில்லியனர்கள்)
19.ஜெனீவா (90,300 மில்லியனர்கள்)
20. பாரிஸ் (88,600 மில்லியனர்கள்).
அமெரிக்காவில் மில்லியனர்கள்
மொத்தத்தில், அதிக மில்லியனர்களைக் கொண்ட முதல் 10 நகரங்களில் பாதி அமெரிக்காவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications