உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் கடுமையான வறுமையில் வாழ்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதும் பேரதிர்ச்சியான ஒன்று. குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் இருப்பதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலகப்போர் உள்ளிட்ட மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வறுமை விகிதங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும், இவற்றில் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உலகின் பெரும்பாலான ஏழை மக்கள் வசிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு (OPHI) வெளியிட்ட ஆய்வறிக்கையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் அதிக மோதல்களைக் கண்டதால், போரில் உள்ள நாடுகளில் வறுமை விகிதங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதை இது சுட்டிகாட்டியுள்ளது.
ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பு மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மனித மேம்பாட்டு அமைப்பு ஆகியவை 2010 முதல் ஆண்டுதோறும் தங்கள் பல பரிமாண வறுமைக் குறியீட்டை (Multidimensional Poverty Index) வெளியிட்டு, 6.3 பில்லியன் மக்களைக் கொண்ட 112 நாடுகளில் இருந்து தரவுகளை சேகரித்து வந்தன. இவற்றில் போதிய வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிபொருள், ஊட்டச்சத்து மற்றும் பள்ளி வருகையின் பற்றாக்குறை போன்ற குறிகாட்டிகளைப் பயன்படுத்தியுள்ளன.
அவற்றில் 2024ல் அந்த வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் 1.1 பில்லியன் மக்கள் வறுமையில் உள்ளதாகவும், அவர்களில் 455 மில்லியன் பேர் போர் நிகழ்ந்த இடத்தின் நிழலில் வாழ்கின்றனர் என்று ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பின் தலைமை புள்ளியியல் நிபுணர் யான்சுன் ஜாங் கூறியுள்ளார். மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு , அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம் மிகப்பெரிய போராட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை கடந்த ஆண்டு முதல் 110 நாடுகளில் உள்ள 6.1 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் மக்கள் தீவிர பல பரிமாண வறுமையில் உள்ளதை சுட்டிகாட்டியுள்ளது. மேலும், இந்த அறிக்கைகள் 18 வயதுக்குட்பட்ட சுமார் 584 மில்லியன் மக்கள் தீவிர வறுமையை அனுபவித்து வருவதாகக் காட்டியது. இதில் உலகளவில் 27.9 சதவீத குழந்தைகள் மற்றும் 13.5 சதவீத பெரியவர்களில் அடங்குவர். உலகின் மிக ஏழ்மையான மக்களில் 83.2 சதவீதம் பேர் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர் என்பதையும் இது காட்டுகிறது.
மேலும் இதுகுறித்து ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சியின் இயக்குனர் சபீனா அல்கிரே கூறுகையில், மோதல்கள் வறுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளைத் தடுத்து வருவதாக கூறியுள்ளார்.
அதேபோல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 234 மில்லியனைப் பாதிக்கும் தீவிர வறுமையில் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. 1.1 பில்லியன் ஏழை மக்களில் ஏறக்குறைய பாதியளவை இந்த ஐந்து நாடுகளும் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications