தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன்.. உண்மையை உடைத்த பிடிஆர்..!

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் முக்கியமான தகவலை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மாநிலத்தின் நிதிநிலை மற்றும் கடன் சுமை ஏற்கனவே அதிகமாக இருக்கும் வேளையில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் 2,63,976 ரூபாய் அளவிலான கடன் சுமை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு உபரி வருமான கொண்ட மாநிலமாக இருந்து தற்போது வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக உள்ளது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியிட என்ன காரணம்..?!

வெள்ளை அறிக்கை வெளியிட என்ன காரணம்..?!

இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டுக் கூட்டத்தில் மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மிக முக்கியமான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

1. எங்களின் அடிப்படை தத்துவத்தையும், குணத்தையும் நிரூபணம் செய்யும்

2. மக்களிடம் உண்மையான தகவலை வெளிப்படைத்தன்மை உடன் கொண்டுபோய்ச் சேர்க்கும் கடமை உள்ளது

3. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடைமையைச் செய்துள்ளோம்.

4. கடன் நிலை, செலவினம், முக்கியமான பொது நிறுவனங்களின் சூழ்நிலையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நிதி நிலை

நிதி நிலை

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது, இதன் பின்பு 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

10 ஆண்டுக் காலம்

10 ஆண்டுக் காலம்

2021-ல் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. இதில் கடைசி 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது மாநிலத்தின் நிதி நிலையை மோசமாக்கியுள்ளது.

அடிப்படை செலவுகளுக்குக் கடன்

அடிப்படை செலவுகளுக்குக் கடன்

பல வழிகளில் தமிழகத்தின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் அடிப்படை செலவுகளுக்குக் கூடக் கடன் வாங்கிச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கான வருமானம் இந்த 10 ஆண்டுகளில் 4-இல் ஒரு பங்கு குறைந்துவிட்டது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதிநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

நிதிநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

2006 - 2011 திமுக ஆட்சியில் வருவாய் உபரி இருந்தது.

2011 - 2016 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை எண்ணிப்பார்க்க முடியாது அளவு ஏற்பட்டுள்ளது.

2016 - 2021 அதிமுக ஆட்சியில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது மொத்த உற்பத்தியில் 8.7% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் சுமை

கடன் சுமை

இதனால் 2021 -22 இடைக்காலப் பட்ஜெட்டின் படி தமிழகத்தின் கடன் சுமை 5,70,189 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மின்துறை மற்றும் போக்குவரத்து துறையின் கடன் எச்சரிக்கை தரும் வகையில் உள்ளதாகவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்தின் கடன் சுமை

ஒவ்வொரு குடும்பத்தின் கடன் சுமை

இந்தக் கடுமையான நிதிநிலையில், மாநிலத்தின் வருவாய்க் குறைந்தது மட்டும் அல்லாமல் கடன் சுமையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் 2,63,976 ரூபாய் அளவிலான கடன் சுமை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+