கடந்த சில தினங்களாகவே இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் எவ்வளவு தான் சரியுமோ? எவ்வளவு தான் இழப்புகளை முதலீட்டாளர்களுக்கு கொடுக்குமோ? தெரியவில்லை.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் அன்னிய முதலீடுகளானது, தொடர்ந்து வெளியேறி வருகின்றது.
கடந்த ஜூன் 15வுடன் முடிவடைந்த 15 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு மட்டும் 2.61 லட்சம் கோடி அல்லது 6.3% சரிவினைக் கண்டு, 41.51 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எஃப்பிஐ முதலீடு வெளியேற்றம்
இது மே 31, 2022வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 44.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சரிவினைக் கண்டு வரும் நிலையில், எஃப்பிஐ (FPI)-க்கள் நடப்பு மாதத்தில் 40,000 கோடி ரூபாய்க்கு மேலாக தங்களது பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.
என்னென்ன துறைகளில் வெளியேற்றம்
இந்த மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 24,949 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.
நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருட்கள், எஃப் எம் சி ஜி, உலோகங்கள் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் இருந்து, அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் (FPI) தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
முதலீடுகளை ஈர்க்கும் துறை
அதேசமயம் எண்ணெய் மற்றும் எரிவாயு, கெமிக்கல் துறைகளில் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஜூன் 15வுடன் முடிவடைந்த முதல் 15 நாட்களில் மின் துறையானது விற்பனையை கண்டது.
எஃப் பி ஐ அதிகளவில் வெளியேற்றம்
ஜூன் 15வுடன் முடிவடைந்த 15 நாட்களில் எஃப் பி ஐக்களின் நிகர விற்பனை 8050 கோடி ரூபாயாக இருந்தது. இது தொடர்ந்து நிதித் துறையில் விற்பனை அதிகமாக இருந்த நிலையில், அதிகளவிலான முதலீடுகள் வெளியேறியன. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் மே 31வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 3894 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மட்டுமே வெளியேறியிருந்தன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications