கடந்த சில தினங்களாகவே இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் எவ்வளவு தான் சரியுமோ? எவ்வளவு தான் இழப்புகளை முதலீட்டாளர்களுக்கு கொடுக்குமோ? தெரியவில்லை.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் அன்னிய முதலீடுகளானது, தொடர்ந்து வெளியேறி வருகின்றது.
கடந்த ஜூன் 15வுடன் முடிவடைந்த 15 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு மட்டும் 2.61 லட்சம் கோடி அல்லது 6.3% சரிவினைக் கண்டு, 41.51 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எஃப்பிஐ முதலீடு வெளியேற்றம்
இது மே 31, 2022வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 44.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு சரிவினைக் கண்டு வரும் நிலையில், எஃப்பிஐ (FPI)-க்கள் நடப்பு மாதத்தில் 40,000 கோடி ரூபாய்க்கு மேலாக தங்களது பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.
என்னென்ன துறைகளில் வெளியேற்றம்
இந்த மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 24,949 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.
நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருட்கள், எஃப் எம் சி ஜி, உலோகங்கள் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் இருந்து, அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் (FPI) தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
முதலீடுகளை ஈர்க்கும் துறை
அதேசமயம் எண்ணெய் மற்றும் எரிவாயு, கெமிக்கல் துறைகளில் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஜூன் 15வுடன் முடிவடைந்த முதல் 15 நாட்களில் மின் துறையானது விற்பனையை கண்டது.
எஃப் பி ஐ அதிகளவில் வெளியேற்றம்
ஜூன் 15வுடன் முடிவடைந்த 15 நாட்களில் எஃப் பி ஐக்களின் நிகர விற்பனை 8050 கோடி ரூபாயாக இருந்தது. இது தொடர்ந்து நிதித் துறையில் விற்பனை அதிகமாக இருந்த நிலையில், அதிகளவிலான முதலீடுகள் வெளியேறியன. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் மே 31வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 3894 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மட்டுமே வெளியேறியிருந்தன.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications