மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் புதிய வருமான வரி சட்டம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடிய பழைய வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக புதிய வருமான வரி சட்டம் 2025 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டார். இந்த நிலையில் புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என அறிவித்திருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

1961ஆம் ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் பல சிக்கல்களும் குழப்பங்களும் இருக்கின்றன. இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கும் கணக்கினை சரிபார்ப்பதற்கும் , புகார்களை சரி செய்வதற்கும் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் அதனை எளிமைப்படுத்தும் வகையில் புதிய வருமான வரி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி விகிதமோ அல்லது வருமான வரி உச்ச வரம்போ மாற்றப்படவில்லை. அதற்கு மாறாக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோர் புதிய படிவங்கள், விதிகளை பற்றி அறிந்து கொள்ள விரிவான கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். பழைய சட்டத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசமே எளிமையான விதிமுறைகள் தான். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மற்றும் வருமான வரி சட்டம் சம்பந்தப்பட்ட பிரிவுகளை இதில் எளிமையாக்கி இருக்கிறார்கள். 1961 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பழைய வருமான வரி சட்டத்துடன் ஒப்பிடும்போது புதிய வருமான வரி சட்டத்தில் எண்ணிக்கை விதிகள் பாதி அளவு குறைக்கப்பட்டு இருக்கின்றன.
அது தவிர வருமான வரி தொடர்பான வழக்குகளை குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பழைய சட்டத்தில் முந்தைய ஆண்டு , மதிப்பீட்டு ஆண்டு என இரண்டு முறை காட்டும் ஆனால் அது தற்போது ஒற்றை வரி ஆண்டாக மாற்றி இருக்கிறார்கள். அடுத்ததாக வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்தால் டிடிஎஸ் பணம் திரும்ப பெற முடியாது. ஆனால் புதிய வருமான வரி சட்டத்தின் படி நீங்கள் வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்தாலும் கூட எந்த அபராதமும் இல்லாமல் டிடிஎஸ் பணத்தை திரும்ப பெற முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications