பெங்களூரின் பிரபல உணவகங்களில் ஒன்றான மேக்னா ஃபுட்ஸ் கடை பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம், காரணம் இந்த ஹோட்டலின் காரசாரமான பிரியாணி அனைவருக்கும் பிடித்த ஒன்று, ஒரு பிரியாணி வாங்கினால் 2 பேர் சாப்பிடும் அளவுக்கும் இருப்பதாலேயே இந்த பிரியாணிக்கு செம டிமாண்ட்.
இந்த நிலையில் மேக்னா ஃபுட்ஸ் ஹோட்டல்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 19 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நேரத்தில், கர்நாடகா மற்றும் கோவாவைச் சேர்ந்த வருமான வரித்துறை குழுவினர், பெங்களூரின் கோரமங்களா, ஜெயா நகர் மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேக்னா ஃபுட்ஸ் கடைகளில் சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இதுவரையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த உணவக நிறுவனம் பத்மா ஆத்லூரி மற்றும் ராம்பாபு மண்டவா ஆகியோரால் நடத்தப்படுகிறது. இந்த ஹோட்டலில் ஆந்திர உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை, குறிப்பாக இவர்களின் பிரியாணி வகைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற தளத்தில் தினசரி அடிப்படையில் அதிகப்படியான ஆர்டர்களை பெற்று வரும் மேக்னா புட்ஸ், பெங்களூரில் பல இடங்களில் கிளவுட் கிட்சன் அமைப்பிலும் இயங்கி வருகிறது. இன்று ராமேஸ்வரம் கபே, ஆர்என்ஆர் பிரியாணி என பல பிராண்டுகள் பெங்களூரில் பிரபலமானதாக இருந்தாலும் கட்டத்தட்ட 15 வருடங்களாக தொடர் வளர்ச்சி பாதையில் உள்ளது மேக்னா புட்ஸ்.
2006 ஆம் ஆண்டு பெங்களூரின் கோரமங்களாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட இந்த உணவகம், தற்போது பெங்களூரில் ஐந்து கிளைகளை கொண்டுள்ளது. நீங்க இந்த ஹோட்டல் பிரியாணியை சாப்பிட்டு உள்ளீர்களா என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications