பெங்களூரின் பிரபல உணவகங்களில் ஒன்றான மேக்னா ஃபுட்ஸ் கடை பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம், காரணம் இந்த ஹோட்டலின் காரசாரமான பிரியாணி அனைவருக்கும் பிடித்த ஒன்று, ஒரு பிரியாணி வாங்கினால் 2 பேர் சாப்பிடும் அளவுக்கும் இருப்பதாலேயே இந்த பிரியாணிக்கு செம டிமாண்ட்.
இந்த நிலையில் மேக்னா ஃபுட்ஸ் ஹோட்டல்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 19 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நேரத்தில், கர்நாடகா மற்றும் கோவாவைச் சேர்ந்த வருமான வரித்துறை குழுவினர், பெங்களூரின் கோரமங்களா, ஜெயா நகர் மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேக்னா ஃபுட்ஸ் கடைகளில் சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இதுவரையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த உணவக நிறுவனம் பத்மா ஆத்லூரி மற்றும் ராம்பாபு மண்டவா ஆகியோரால் நடத்தப்படுகிறது. இந்த ஹோட்டலில் ஆந்திர உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை, குறிப்பாக இவர்களின் பிரியாணி வகைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற தளத்தில் தினசரி அடிப்படையில் அதிகப்படியான ஆர்டர்களை பெற்று வரும் மேக்னா புட்ஸ், பெங்களூரில் பல இடங்களில் கிளவுட் கிட்சன் அமைப்பிலும் இயங்கி வருகிறது. இன்று ராமேஸ்வரம் கபே, ஆர்என்ஆர் பிரியாணி என பல பிராண்டுகள் பெங்களூரில் பிரபலமானதாக இருந்தாலும் கட்டத்தட்ட 15 வருடங்களாக தொடர் வளர்ச்சி பாதையில் உள்ளது மேக்னா புட்ஸ்.
2006 ஆம் ஆண்டு பெங்களூரின் கோரமங்களாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட இந்த உணவகம், தற்போது பெங்களூரில் ஐந்து கிளைகளை கொண்டுள்ளது. நீங்க இந்த ஹோட்டல் பிரியாணியை சாப்பிட்டு உள்ளீர்களா என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications