அனைத்து தரப்பினரையும், அனைத்து வர்த்தகத்தையும் வரி அமைப்பிற்குள் கொண்டு வேண்டும் என்பது தான் வருமான வரித்துறையின் முக்கிய இலக்காக இருக்கும் வேளையில், வரி ஏய்ப்பு நடக்கும் அனைத்து முயற்சிகளை தடுக்கும் பல முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது. இதனால் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்திய வரலாற்றிள் முதன்முறையாக, 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை எட்டு கோடிக்கும் அதிகமான வருமான வரி அறிக்கைகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று வருமானவரி துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் AY 2022-23க்கான மொத்தத் தாக்கல்களின் மொத்த எண்ணிக்கை 7,51,60,817 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட டிவிட்டர் பதிவில் 8 கோடியை மைல்கல்-ஐ கடக்க எங்களுக்கு உதவிய அனைத்து வருமான வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கும் வருமான வரித்துறை தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று தனது பதிவில் தெரிவித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் மொத்த நிகர நேரடி வரி வசூல் ரூ.16.63 லட்சம் கோடி, இதில் வருமான வரி வசூல் ரூ.8.08 லட்சம் கோடியாகும். மத்திய அரசு ஜிஎஸ்டி வரி மூலம் ஒவ்வொரு மாதமும் 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தொடர்ந்து வசூலித்து வரும் வேளையில், நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது முக்கியமான விஷயமாக அரசு பார்க்கிறது.
2022-23 இல் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரிக் கணக்கை (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2023 ஆகும். இக்குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு வருமானத்தைத் தாக்கல் செய்ய விரும்புவோர அபராதத்துடன் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் அறிக்கையை தாக்கல் செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான ITR படிவங்கள் குறித்த அறிவிப்பை மத்திய நேரடி வரி வாரியம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் அறிவிக்கப்படும். ஆனால் சமீபத்திய காலத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது, அதுவும் இந்த முறை 7 மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட அறிவிப்பில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கு அல்லது 2024-25 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31, 2024 கடைசி நாள் என அறிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட அறிவிப்பில் ஐடிஆர் படிவம் 1 (SAHAJ) மற்றும் ஐடிஆர் படிவம் 4 (SUGAM) ஆகியவற்றை, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25க்கு ஆண்டு வருமானம் ரூ. 50 லட்சம் வரை உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications