புதிய வருமான வரித் தளத்தில் பல குளறுபடிகள், பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் தொடர் கண்காணிப்பு மற்றும் கோரிக்கை அடிப்படையில் இன்போசிஸ் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்த்து வருகிறது. ஆனால் வருமான வரித் தளம் மெதுவாக இயங்குவதாக இன்னமும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய வருமான வரித் தளத்தில் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு உள்ள காரணத்தால் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளனர்.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி புதிய வருமான வரித் தளத்தில் ஜூலை 24 முதல் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்து வருவதாகவும், அதிலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை இதன் எண்ணிக்கை 1,50,000 ஆக உயர்ந்துள்ளது.
புதிய வருமான வரித் தளம்
இதன் மூலம் புதிய வருமான வரித் தளத்தின் பயன்பாடு மற்றும் மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் வரி வருமான செலுத்துவோர் மற்றும் வரி தணிக்கையாளர் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருப்பதாகவும், இணையதளம் இயங்குவதில் மெதுவாக (slow) இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
10 சதவீதம் பேர்
மேலும் புதிய வருமான வரித் தளத்திற்குக் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் தினமும் 10 லட்சம் பேர் லாக்இன் செய்ததாகத் தெரிவித்துள்ளது. ஆனால் அதில் 10 சதவீதம் பேர் மட்டுமே தினமும் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
வருமான வரி அறிக்கை
ஜூலை 13 முதல் ஜூலை 28 வரையில் சுமார் 5,50,000 படிவங்கள் புதிய வருமான வரித் தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவோருக்கு எளிதாக்க வேண்டும் என்பதற்காகத் தத்தம் நபரின் வருமான தரவுகள் தற்போது தயாராக வருமான படிவத்தில் Pre Filled data-வாக உள்ளது.
கூடுதல் விபரம்
அடுத்தச் சில நாட்களில் வருமான வரி செலுத்துவோரின் வட்டி வருமானம், ஈவுத்தொகை வருமானம், கேப்பிடல் கெயின்ஸ் வருமானம் போன்ற தரவுகளை பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இன்போசிஸ்
புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் பிரச்சனைகளைக் களையவும், தொடர்ந்து புதுப்புது சேவைகளைக் கொண்டுவரவும், வருமான வரி செலுத்துவோருக்கு எளிதாகவும், மேம்பட்ட அனுபவத்தை அளிக்கவும் வருமான வரித்துறை, ICAI, மற்றும் இதர அரசு அமைப்புகள் தொடர்ந்து இன்போசிஸ் உடன் நெருங்கி இயங்கி வருகிறது.
மத்திய நிதியமைச்சகம்
கொரோனா தொற்று காரணமாக வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய நிதியமைச்சகம் புதிய வருமான வரி தளத்தை அறிமுகம் செய்து வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
இன்போசிஸ்
புதிய வருமான வரி தளத்தை உருவாக்க மத்திய அரசு 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொடுத்து மக்களின் பணத்தை வீண் செய்துள்ளது என பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான தரவுகள் அடிப்படையில் மத்திய அரசு புதிய வருமான வரி தளம் மற்றும் CPC 2.0 உருவாக்க ஜனவரி 2019 முதல் ஜூன் 2021 வரையில் 164.5 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகத் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications