இந்தியாவில் வருமானம் பெறும் ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வருமான வரி தாக்கல் செய்வது என்பது ஜனநாயக கடமையாகும். அப்படி வருமான வரி தாக்கல் செய்யும்போது வெளிநாட்டிலுள்ள சொத்துக்கள் மற்றும் வருமானத்தையும் தெளிவாக வருமானவரி தாக்கல் படிவத்தில் வெளிப்படுத்த வேண்டும். இதை செய்ய தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.
வருமானவரித்துறை தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தாமதமான மற்றும் திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதை குடிமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

அதோடு வருமானவரி தாக்கல் செய்பவர், தங்களுடைய வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டில் சம்பாதித்த வருமானத்தையும் வருமான வரி கணக்கில் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரித்துறை வரி செலுத்துவதற்கான பொது ஆலோசனையை வெளியிட்டது. வரி செலுத்துவோர் 2024 முதல் 2025-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி ரிட்டனில் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். மேலும் எந்த தகவல்களையும் மறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
எந்தெந்த வெளிநாட்டு சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்?: வங்கி கணக்கு, கேஷ் வேல்யூ இன்சூரன்ஸ் காண்ட்ராக்ட் அல்லது வருடாந்திர ஒப்பந்தம், வணிகத்திற்கு கிடைக்கும் வட்டி அல்லது வருமானம், அசையா சொத்து, பங்குகள் மற்றும் கடன்களுக்கான வட்டி போன்ற அனைத்து சொத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டும்.
அபராதம் தொடர்பான செய்திகள் எப்படி அனுப்பப்படும்?: 2024 முதல் 2025-ஆம் ஆண்டிற்கான ஐடிஆர்-ரை ஏற்கனவே தாக்கல் செய்த இந்திய குடிமக்களுக்கு SMS மற்றும் மெயில் மூலம் CBDT தகவல்களை அனுப்பவுள்ளது. தங்களுடைய வெளிநாட்டு சொத்துக்களை மறைக்கும் இந்திய குடிமக்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க இந்திய தகவல் தொடர்பு ஆணையம் பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதேபோல ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கு வரம்பை மீறி லட்ச கணக்கில் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர் குறித்த விவரங்களை வங்கிகள் வருமானவரித்துறைக்கு தெரிவிக்கும். எனவே ஒரு வரி செலுத்துவோரை பற்றிய விவரங்கள் பல்வேறு வழியாக வருமானவரித்துறையைச் சென்றடையும்.
எனவே வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தையும் வரி தாக்கல் படிவத்தில் தெரிவித்து.. தேவையற்ற அபராதம் விதிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications