ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம் என்பதால், அன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படாது. இந்த நாள் இந்திய தேசிய விடுமுறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை நினைவுகூரும் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்திற்காக, நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
பொதுவாக வங்கிகள் தேசிய, மத மற்றும் பிராந்திய அடிப்படையிலான பண்டிகைகளைக் கொண்டாட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மேலும், ஒவ்வொரு மாதமும் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது சனிக்கிழமைகளைத் தவிர, வார இறுதி நாட்களில் வங்கிகள் செயல்படாது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் ஆண்டு விடுமுறை பட்டியலில் வங்கி விடுமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். காசோலைகள் மற்றும் promissory note-கள் வெளியிடுதலை ஒழுங்குபடுத்தும் 'Negotiable Instruments Act’-ன் படி இந்த விடுமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விடுமுறை நாட்களில், நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது.
வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கிச் சேவைகள் முழுமையாக கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களிலும் வங்கிச் செயல்பாடுகளை அணுக முடியும். NEFT/RTGS மூலம் நிதிப் பரிமாற்றங்கள், டிமாண்ட் டிராஃப்டுகள் மற்றும் காசோலை புத்தகங்களை ஆர்டர் செய்வது போன்ற சேவைகளை பயனர்கள் பயன்படுத்தலாம்.
கிரெடிட், டெபிட் மற்றும் ATM கார்டுகளைப் பெறுவதற்கான கார்டு சேவைகளும் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. மேலும், கணக்கு பராமரிப்பு, லாக்கர் விண்ணப்பங்கள் போன்ற பல்வேறு கணக்கு தொடர்பான படிவங்களையும் ஆன்லைன் மூலம் அணுக முடியும். ஆனால் வங்கிகளுக்கு நேரில் சென்று பெறக்கூடிய சேவைகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி பெற முடியாது.
ஆகஸ்ட் 15 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் சுதந்திர தினம், பார்சி புத்தாண்டு (ஷாஹென்ஷாஹி) மற்றும் ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களுக்காக மூடப்பட்டிருக்கும். இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் பிற நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மக்களை இதை தெரிந்துக்கொண்டு வங்கி பணிகளை எளிதாக திட்டமிடலாம்.
ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை) அன்று அகமதாபாத் (குஜராத்), அய்ஸ்வால் (மிசோரம்), போபால் மற்றும் ராஞ்சி (மத்தியப் பிரதேசம்), சண்டிகர் (யூனியன் பிரதேசம்), சென்னை (தமிழ்நாடு), டேராடூன் (உத்தராகண்ட்), காங்டாக் (சிக்கிம்), ஹைதராபாத் (தெலங்கானா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), கான்பூர் மற்றும் லக்னோ (உத்தர் பிரதேசம்), பட்னா (பீகார்), ராய்பூர் (சத்தீஸ்கர்), ஷில்லாங் (மேகாலயா), ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) மற்றும் விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய நகரங்களில் ஜன்மாஷ்டமி (சிராவன் வத்-8) மற்றும் கிருஷ்ண ஜெயந்தி காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 17 அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் வார இறுதி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 19 அன்று அகர்தலாவில் (திரிபுரா) மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் பிறந்தநாளுக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 23 அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மாதத்தின் நான்காவது சனிக்கிழமைக்காக மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 24 அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் வார இறுதி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 25 அன்று குவாஹாத்தி (அசாம்) வங்கிகள் ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் திருபாவ திதி காரணமாக மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 27 அன்று அகமதாபாத் (குஜராத்), பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் (மகாராஷ்டிரா), பெங்களூரு (கர்நாடகா), புவனேஷ்வர் (ஒடிசா), சென்னை (தமிழ்நாடு), ஹைதராபாத் (தெலங்கானா), பனாஜி (கோவா) மற்றும் விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய நகரங்களில் கணேஷ் சதுர்த்தி மற்றும் சம்வட்சரி (சதுர்த்தி பக்ஷா), வரசித்தி விநாயக விரதம், கணேஷ் பூஜை மற்றும் விநாயகர் சதுர்த்திக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 28 அன்று புவனேஷ்வர் (ஒடிசா) மற்றும் பனாஜி (கோவா) ஆகிய நகரங்களில் கணேஷ் சதுர்த்தி மற்றும் நுவாகாயின் இரண்டாம் நாளுக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 31 அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் வார இறுதி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications