டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி அவர்கள் சமீபத்தில் கார் விபத்தில் பலியானதையடுத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்ற விதியை இறுதி செய்ய உள்ளதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்பது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை பாதுகாப்பு
இந்திய சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் சைரஸ் மிஸ்ட்ரி கார் விபத்தில் இறந்த சம்பவம் சாலை பாதுகாப்புகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு காரிலும் 6 ஏர்பேக்குகள்
சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகள் வரும் ஜனவரி மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
கார் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு
ஆனால் இதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இதனால் கார் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு சமரசரம் செய்யாது என்றும் கட்டாயம் புதிய விதிகள் குறித்த உத்தரவு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.
அலாரம் அமைப்பு
மேலும் கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கை பெல்ட்களை பயன்படுத்துவதற்கு அலாரம் அமைப்பை நிறுவுவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அனைத்து மக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்று கூறியுள்ள சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர்பேக்குகள் குறித்த விதி இறுதி செய்யப்படும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
விபத்துக்கள் குறையும்
புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டால் 2024 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் பாதியாகக் குறையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
செலவு அதிகரிக்குமா?
தற்போது கார்களில் இரண்டு ஏர்பேக்குகள் அதாவது ஓட்டுநர் மற்றும் முன் பயணிக்கு தலா ஒன்று என்பது கட்டாயமாக உள்ளது. மேலும் நான்கு ஏர்பேக்குகளை சேர்த்தால் $75க்கு மேல் செலவாகாது என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. இருப்பினும், வாகன சந்தை தரவு வழங்குநரான JATO டைனமிக்ஸ் 6 ஏர்பேக்குகள் வைக்க குறைந்தபட்சம் $231 செலவை அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications