இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பத்திர சந்தையானது, சர்வதேச சந்தையுடன் ஒபபிடும்போது பரவாயில்லை எனும் விதமாக காணப்படுகின்றது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், கடன் பத்திரங்களில் அதிக ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது.
மூன்றாவது காலாண்டில் சீனா உள்பட பல நாடுகளின் பத்திர சந்தையானது சரிவில் காணப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளின் இறையாண்மை கடன் வளர்ச்சி விகிதமானது முறையே 0.4% மற்றும் 1.5% என்ற அளவுக்கு குறைந்த இழப்பினை கண்டுள்ளது. இது ஆசிய நாடுகளில் மிக சின்றத செயல்திறன் கொண்ட சீனாவினையே பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்தியா, இந்தோனேஷியா தான் பெஸ்ட்
மூன்றாவது காலாண்டில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் செல் ஆஃப் நிலைக்கு மத்தியில், இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் சற்று பரவாயில்லை எனும் விதமாக காணப்படுகிறது.
மூன்றாவது காலாண்டில் தென் கொரியா, தாய்வான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா, இந்தோனேஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள், இந்தியா, இந்தோனேஷியாவுக்கு பின்னால் உள்ளன.
அமெரிக்கா, சீனா கூட சரிவு
இது அமெரிக்க உள்ளிட்ட பத்திர சந்தைகளின் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், இந்தியா, இந்தோனேஷியா சந்தைகள் பாதுகாப்பினை கொடுக்கலாம். குறிப்பாக சீனாவிலும் தற்போது மந்த நிலையே காணப்படும் நிலையில், சீனாவிலும் முதலீடுகள் குறைந்துள்ளது. சீனாவின் பத்திர சந்தையில் ஏப்ரல் மாதம் முதல் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
ரூபாய் தான் பெஸ்ட்
ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்கும் விதமான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது பத்திர சந்தைக்கும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் ஆசிய நாணயங்களில் இந்தியா ரூபாயின் மதிப்பானது சிறந்ததாக மாறியுள்ளது. இது இந்திய சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைக்கு திரும்ப காரணமாக அமைந்துள்ளது.
மேலும் அதிகரிக்கலாம்
தொடர்ந்து சர்வதேச சந்தைக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமும் சற்றே பரவாயில்லை எனும் விதமாகவே காணப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு மேலும் ஏற்றம் காணலாம். இது பத்திர சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications