சீனாவை விட இந்தியா, இந்தோனேஷியா பரவாயில்லை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்.. ஏன்?

இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பத்திர சந்தையானது, சர்வதேச சந்தையுடன் ஒபபிடும்போது பரவாயில்லை எனும் விதமாக காணப்படுகின்றது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், கடன் பத்திரங்களில் அதிக ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது.

மூன்றாவது காலாண்டில் சீனா உள்பட பல நாடுகளின் பத்திர சந்தையானது சரிவில் காணப்படுகிறது. குறிப்பாக இரு நாடுகளின் இறையாண்மை கடன் வளர்ச்சி விகிதமானது முறையே 0.4% மற்றும் 1.5% என்ற அளவுக்கு குறைந்த இழப்பினை கண்டுள்ளது. இது ஆசிய நாடுகளில் மிக சின்றத செயல்திறன் கொண்ட சீனாவினையே பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்தியா, இந்தோனேஷியா தான் பெஸ்ட்

இந்தியா, இந்தோனேஷியா தான் பெஸ்ட்


மூன்றாவது காலாண்டில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் செல் ஆஃப் நிலைக்கு மத்தியில், இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் சற்று பரவாயில்லை எனும் விதமாக காணப்படுகிறது.

மூன்றாவது காலாண்டில் தென் கொரியா, தாய்வான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா, இந்தோனேஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள், இந்தியா, இந்தோனேஷியாவுக்கு பின்னால் உள்ளன.

அமெரிக்கா, சீனா கூட சரிவு

அமெரிக்கா, சீனா கூட சரிவு

இது அமெரிக்க உள்ளிட்ட பத்திர சந்தைகளின் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், இந்தியா, இந்தோனேஷியா சந்தைகள் பாதுகாப்பினை கொடுக்கலாம். குறிப்பாக சீனாவிலும் தற்போது மந்த நிலையே காணப்படும் நிலையில், சீனாவிலும் முதலீடுகள் குறைந்துள்ளது. சீனாவின் பத்திர சந்தையில் ஏப்ரல் மாதம் முதல் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.

ரூபாய் தான் பெஸ்ட்

ரூபாய் தான் பெஸ்ட்

ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்கும் விதமான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இது பத்திர சந்தைக்கும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் ஆசிய நாணயங்களில் இந்தியா ரூபாயின் மதிப்பானது சிறந்ததாக மாறியுள்ளது. இது இந்திய சந்தையில் மீண்டும் அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைக்கு திரும்ப காரணமாக அமைந்துள்ளது.

மேலும் அதிகரிக்கலாம்

மேலும் அதிகரிக்கலாம்

தொடர்ந்து சர்வதேச சந்தைக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமும் சற்றே பரவாயில்லை எனும் விதமாகவே காணப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு மேலும் ஏற்றம் காணலாம். இது பத்திர சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+