இந்தியா - ஆஸ்திரேலியா உடனான வரம்பற்ற வர்த்தக நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தினால் இரு தரப்பு வணிகமும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்றுமதி இறக்குமதியினை தாண்டி, பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கலாம்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 1.4 பில்லியன் மக்களை கொண்ட இந்திய சந்தையில், அதிக அளவிலான வணிக வாய்ப்புகளை ஆஸ்திரேலியா பெறலாம். இந்தியா இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.
முதல் கட்ட நடவடிக்கை
மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். கட்டண குறைப்புகள் படிப்படியான அமலுக்கு வரும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் கட்டமாக கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட கட்டண குறைப்பானது ஜனவரி 1, 2023 அன்று இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன பொருட்களுக்கு வரி குறைப்பு?
இந்த கட்டண குறைப்பு பட்டியலில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கம்பளி, ஆட்டுக் குட்டி, பார்லி, ஓட்ஸ், நண்டுகள், அழகு சாதன பொருட்கள், மற்றும் பல முக்கியமான தாதுக்கள், இரும்பு, டைட்டானியம் டையாக்சைடு உள்ளிட்ட பல பொருட்களுக்குமான 85% மேலான வரிகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இனி பூஜ்ஜிய வரியில் ஆஸ்திரேலிய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்து கொள்ளலாம்.
படிப்படியாக வரி குறைக்கப்படும்
இதே 5% ஏற்றுமதி வரியில் இறக்குமதி செய்யப்படும் மக்காடாமியா நட்ஸ், வெண்ணெய், பெர்ரி, கடல் உணவுகள், மருந்துகள், கோக்லியர் இம்ப்லாண்ட்ஸ், வைட்டமின்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், காலை உணவு தானியங்கள், பாஸ்தா, சந்தன சிப்கள், பம்புகள் மற்றும் பில்லர்கள், இயந்திர பாகங்கள், சுரங்கம் சம்பந்தமான இயந்திரங்கள் என பலவற்றிற்கும் படிப்படியாக 0% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண சலுகை
இது தவிர பிரீமியம் ஓயின், பருப்பு, பாதாம், ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் என பல ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள், இப்போது குறைந்த கட்டண சலுகையை பெறலாம். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் மேற்கூறப்பட்ட பொருட்களின் இறக்குமதியானது இங்கு குறைந்த கட்டணத்தில் இறக்குமதி செய்ய முடியும். இதன் காரணமாக விலையும் குறையும்.
பியூஸ் கோயல் கருத்து?
மொத்தத்தில் இந்த தடையற்ற வணிக ஒப்பந்தம் ஏற்றுமதியினை அதிகரிக்கும். இது இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தும். அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இது குறித்து பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம். இது இருதர்பபு வணிகத்திலும் ஒரு முக்கிய மைல்கல். இது ஏற்றுமதியினை அதிகரிக்கும் என்பதோடு, வேலை வாய்ப்பினையும் ஊக்குவிக்கும். இது முதலீட்டுக்கான வாய்ப்பினை அதிகரிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இருதரப்பின் கூட்டாண்மையை வலுப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள் என்ன?
100% கட்டண வரிகளுக்கு ஆஸ்திரேலியாவால் பூஜ்ஜிய வரி விதிக்கப்படும்.
அடுத்த 4 - 5 ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
ஆஸ்திரேலியாவில் இருந்து முதலீடுகள் அதிகரிக்கும்.
1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிப்புக்கு பின் வேலை விசா மூலம் பயனடைவார்கள்
இந்தியாவின் யோகா ஆசிரியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் இதன் மூலம் வாய்ப்பினை பெறுவார்கள்
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருதரப்பு வணிகமும் 27 பில்லியன் டாலர்களில் இருந்து, 45 - 50 பில்லியன் டாலராக இந்த ஒப்பந்தம் உதவும் எனலாம்.
ஆஸ்திரேலியா முதல் நாளில் இருந்தே சுமார் 96.4% ஏற்றுமதி களுக்கு, பூஜ்ஜிய வரியினை வழங்கும். இதில் ஆஸ்திரேலியாவில் 4- 5% சுங்க வரிகளை ஈர்க்கும் சில பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி
பெட்ரோலிய பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், பொறியியல் பொருட்கள், தோல் பொருட்கள், கெமிக்கல்கள், ஜெம்ஸ் மற்றும் ஜீவல்லரி பொருட்கள் என பலவும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதே இறக்குமதியில் மூலதன பொருட்கள், நிலக்கரி, கனிமங்கள் மற்றும் இடை நிலை பொருட்கள் என பலவும் அடங்கும்.
இந்தியாவில் பலனடையும் துறைகளாகும்
ஆஸ்திரேலியா இந்தியாவின் 17 வர்த்தக பங்காளியாக இருந்து வருகின்றது. பொருட்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பின் வணிகத்தின் மதிப்பு 27.5 பில்லியன் டாலராகும்
இந்தியாவில் இருந்து ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி, தோல், காலணிக்ள், பர்னிச்சர், உணவு மற்றும் விவசாய பொருட்கள், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள் என பலதுறைகளும் இந்த ஒப்பந்தத்தினால் பயனடையும். இந்த இரு தரப்பு ஒப்பந்தத்தின் மத்தியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் பலன் அடைவார்கள்.
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications