டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, பாகிஸ்தான் நாட்டு கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் .இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவின் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் நாட்டுக் கப்பல்கள் இந்தியாவின் எந்த துறைமுகங்களிலும் நுழையக்கூடாது, அதாவது இந்தியாவிற்குள்ளேயே நுழைய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல இந்தியாவை சேர்ந்த கப்பல்கள் பாகிஸ்தானில் எந்த ஒரு துறைமுகத்திலும் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது. இந்த பிரச்சினையை மிக தீவிரமாக மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. முன்னதாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளி வழியாக எந்த ஒரு நாட்டிற்கும் செல்ல முடியாது.
தற்போது பாகிஸ்தான் கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் நாட்டு கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழையக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 2ஆம் தேதி பாகிஸ்தான் இந்தியா இடையிலான அனைத்து விதமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் நேரடியாக இந்தியாவிற்கு வருவது மட்டுமின்றி மூன்றாம் தரப்பு நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது.
பாகிஸ்தானில் ஏற்கனவே சிமெண்ட், வேளாண் பொருட்கள் மற்றும் துணிமணிகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவும் அந்நாட்டுடனான ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை விதித்திருப்பதால் பொருளாதார ரீதியாக இந்த நாட்டிற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக மத்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, அந்நாட்டுக்கு கிடைக்கும் நிதி உதவிகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ராஜாங்க ரீதியாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர கூடிய வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications