உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள் ஐடி, டெக், ஆராய்ச்சி, வங்கி, நிதியியல் சேவை, அறிவியல், கட்டுமானம், ஆட்டோமொபைல் எனப் பல துறையில் பணியாற்றி அசத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீப காலங்களில் உலக நாடுகளின் அரசியலிலும் இந்திய வம்சாவளியினர் அசத்தி வருகின்றனர் குறிப்பாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அசத்தி வருகின்றனர்.
ரெமிட்டன்ஸ்
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பல கோடி இந்தியர்கள் 90 சதவீதம் பேர் செய்யும் ஒரு செயல் என்றால் தாய் நாட்டிற்குப் பணத்தை அனுப்புவது தான்.
இது ரெமிட்டன்ஸ் என அழைக்கப்படுகிறது, இந்த வருடம் உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பும் தொகையான வரலாற்று உச்சத்தைத் தொட உள்ளது.
NRI-கள்
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்று பணியாற்றும், வர்த்தகம் செய்யும் NRI-கள் இந்த வருடம் முடிவதற்குள் தாய் நாட்டிற்கு வரலாற்றிலேயே அதிகப்படியான தொகையை அனுப்ப உள்ளனர்.
இந்தியா
ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவுக்கு 1980களில் இருந்து ரெமிட்டன்ஸ் தொகை மிகவும் முக்கியமானதாக உள்ளது. 1990களில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் காப்பாற்றியதே இந்த ரெமிட்டன்ஸ் தான் என்றால் மிகையில்லை.
100 பில்லியன் டாலர்
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு வரும் ரெமிட்டன்ஸ் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 12 சதவீதம் அதிகரித்து 100 பில்லியன் டாலர் அளவீட்டை எட்ட உள்ளது என உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ்
இதன் மூலம் ரெமிட்டன்ஸ் அதிகம் பெரும் நாடுகள் பட்டியலில் மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை விடவும் உச்சத்தை அடைந்து உலகில் அதிகம் ரெமிட்டன்ஸ் பெறும் நாடாக இந்தியா உயர உள்ளது.
பணக்கார நாடுகள்
இந்தியாவின் திறமை மிக்க இளைஞர்கள் பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், துபாய், கத்தார், போன்ற உலகின் பல நாடுகளில் இருக்கும் காரணத்தால் இந்தியாவுக்கு வரும் ரெமிட்டன்ஸ் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வொயிட் காலர் வேலை
இந்தியர்கள் வொயிட் காலர் வேலைகளுக்கு மட்டும் அல்லாமல் ப்ளூ காலர் வேலைகளுக்கு அதிகமாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் காரணத்தால் இப்பகுதியில் இருந்து வரும் ரெமிட்டன்ஸ் தொகை மிகவும் அதிகமாக உள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
இந்தியாவுக்கு என்ஆர்ஐ-கள் பணம் அனுப்புவதால் என்ன நன்மை என்றால், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும். இது மட்டும் அல்லாமல் டாலர் மற்றம் இதர நாணயங்களுக்காக அதிகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டியது இல்லை.
ஜிடிபி-யில் 3 சதவீதம்
குறிப்பாகச் சர்வதேச நாடுகள் மோசமான நிலையில் இருக்கும் போது டாலர் மதிப்பு மட்டும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐகள் இந்தியாவுக்குப் பணத்தை அனுப்பினால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும். இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 3 சதவீதம் ரெமிட்டன்ஸ் தான்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications