ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சீனா தான் முன்னணியில் இருந்து வருகின்றது. எனினும் சீனாவினை தொடர்ந்து தற்போது இந்தியா குறிப்பிட்ட துறைகளில் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் 2022ம் நிதியாண்டில் இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
சொல்லப்போனால் தற்போது சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இருமடங்கு வளர்ச்சி
கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவின் மொபைல்போன் உற்பத்தி மதிப்பானது 5277 கோடி ரூபாய் மதிப்பில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் வெறும் 2334 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இதுவே 2020ல் 2485 கோடி ரூபாயாகவும் இருந்தது. இது மத்திய அரசின் பி எல் ஐ திட்டத்தினை அடுத்து இந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
வேகமாக வளர்ந்து வரும் துறை
பி எல் ஐ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் மொபைல் போன் உற்பத்தியும் ஒன்று. இதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்திய உருவெடுத்துள்ளது என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பி எல் ஐ திட்டத்தின் மூலம் சலுகை
மத்திய அரசு மொபைல் பொன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தியாளர்களுக்கு பி எல் ஐ திட்டத்தின் மூலம் 4 - 6% சலுகைகள் அளிப்பதால், இது உற்பத்தியாளர்கள் மத்தியில் நல்லதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியாவின் உற்பத்தி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது.
எத்தனை பேருக்கு அனுமதி
பி எல் ஐ திட்டத்தின் மூலம் இந்திய அரசு சுமார் 10 மொபைல் போன் உற்பத்தியாளர்கள் மற்றும் 6 மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எவ்வளவு உற்பத்தி
இந்தியா கடந்த 2020 - 21ல் 300 மில்லியன் மொபைல் போன்களை உற்பத்தி செய்துள்ளது. இதே கடந்த 2014 - 15ல் 60 மில்லியன் ஆக இருந்தது என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது 2024ல் 400 மில்லியனை எட்டும் என்றும் டெலாய்ட் சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
5ஜி பங்கு
5ஜிக்களுக்கான தேவை என்பது பெரியளவில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக 2026ல் மட்டும் சுமார் 80% சாதங்களில் 5ஜி பங்களிக்கலாம் என்றும் ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. உள் நாட்டில் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் இறக்குமதியானது 33% குறைந்துள்ளது என கிரிசில் அறிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு பிரச்சனை
நிச்சயம் இது போட்டி நாடான சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே கூறலாம். ஏனெனில் இனி வரும் காலத்தில் நிச்சயம் சீனாவில் இருந்து உற்பத்தி குறைய இது வழிவகுக்கலாம். இது மொபைல் போன் உற்பத்தியில் மட்டும் அல்ல, ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் பங்கீடு என்பது அதிகரிக்கலாம். இது சீனாவுக்கு பாதகமாகவும் அமையக்கூடும். சீனா மட்டும் அல்ல, படிப்படியாக மற்ற நாடுகளில் இருந்தும் இந்தியாவின் இறக்குமதியினை குறைக்க வழிவகுக்கலாம்.
இறக்குமதி சரிவு
கடந்த 2022ம் நிதியாண்டிலே சீனாவில் இருந்து முந்தைய ஆண்டினை காட்டிலும் இறக்குமதி 37% சரிவினைக் கண்டுள்ளது. இதே வியட்னாமில் இருந்து 21% குறைந்துள்ளது. எனினும் தென் கொரியாவில் இருந்து 186% வளர்ச்சி கண்டும், நெதர்லாந்தில் இருந்து 512% வளர்ச்சி கண்டும் உள்ளது. எனினும் தென் கொரியாவின் பங்கு மொத்த இறக்குமதியில் 15%மும், நெதர்லாந்தில் 1% மட்டுமே கொண்டுள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!



Click it and Unblock the Notifications