சமீபத்தில் இந்தியாவில் பில்லியனர்கள் அதிகரிப்பை காட்டும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. UBS-இன் பில்லியனர் அறிக்கை 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 185 பில்லியனர்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் 3-வது பெரிய பில்லியனர் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக பில்லியனர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
UBS அறிக்கையின் மூலம் இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருவதை தெரிந்துகொள்ள முடிகிறது. 2023-ஆம் ஆண்டில் 32 புதிய பில்லியனர்கள் உருவாகினர். ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 21% அதிகரிப்பு உள்ளது. 2015-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து பில்லியனர்களின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளிலும் இரட்டிப்பாகியுள்ளது. அதாவது சுமார் 123% அதிகரிப்புடன் பில்லியனர்கள் அதிகரித்து வருவதாக UBS அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பில்லியனர்களின் நிகர மதிப்பு கடந்த ஆண்டை விட 42.1% அதிகரித்து 95.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் வலுவான பொருளாதாரம் இருப்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும். UBS அறிக்கையின் படி இந்த வளர்ச்சி இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய செல்வத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் தெரிய வருகிறது.
அமெரிக்காவும் சீனாவும் UBS அறிக்கை தரவரிசையில் முன்னணியில் உள்ளன. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 84 பில்லியனர்கள் அதிகரித்துள்ளனர். இவர்களுடைய சொத்து மதிப்பு $ 4.6 டிரில்லியன் முதல் $ 5.8 டிரில்லியன் வரை அதிகரித்திருக்கிறது. சீனாவில் பில்லியனர் அறிக்கையில் சிறு சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 93 பில்லியனர்கள் சீனாவில் குறைந்துள்ளனர். இதனால் மொத்த பில்லியனர் சொத்து மதிப்பு $ 1.8 ட்ரில்லியனிலிருந்து $ 1.4 ட்ரில்லியன் வரை சரிந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய பில்லியனர்கள் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 1,757 ஆக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டில் 2682-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த பில்லியனர்களின் மொத்த செல்வம் 121% அதிகரித்து $ 14 ட்ரில்லியனை எட்டியுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல குடும்பமாக இணைந்து வணிகங்களில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் குடும்ப வணிகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று யூபிஎஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications