என்னது மேலும் 10% வரியா? பிரதமர் மோடிக்கு அவசரமாக ஃபோன் போட்ட பிரேசில் அதிபர்.. அடுத்து என்ன..?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, பிரேசில் அதிபர் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva), இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்த உரையாடலில், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையே புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் உருவாகும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

என்னது மேலும் 10% வரியா? பிரதமர் மோடிக்கு அவசரமாக ஃபோன் போட்ட பிரேசில் அதிபர்.. அடுத்து என்ன..?

பிரேசில் அதிபர் உடனான உரையாடலுக்கு பிறகு, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "பிரேசில் அதிபர் லூலாவுடன் சிறந்த உரையாடல் நடைபெற்றது. பிரேசிலில் என் வருகையை நினைவுறுத்தத்தக்க வகையில் அர்த்தமுள்ளதாக மாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், ஆற்றல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் எங்கள் மூலதன ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் பிரேசில் மீது விதித்த கூடுதல் 25% வரி (மொத்தம் 50%) குறித்து, பிரேசில் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, கடந்த வியாழக்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலில் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக் கொண்டன.

இதையடுத்து, வெளியான அறிக்கைகளின்படி, பிரேசில் அதிபர் லூலா, டிரம்ப் விதித்த வரிகளை எதிர்கொள்வதற்காக பிரிக்ஸ் (BRICS) நாடுகளுடன் ஒருங்கிணைந்த பதிலை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அவர், சீன அதிபர் ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, வரிவிதிப்புகளுக்கு எதிரான துரித நடவடிக்கையைப் பற்றிப் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா) இடையே ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க லூலா முயற்சி எடுத்து வருகிறார். இந்த உரையாடல்கள், உலக தெற்குப் பகுதிகளின் பொருளாதாரத்தையும், பெரும் வர்த்தக நாடுகளின் ஒடுக்குமுறைக்கு எதிரான பதிலையும் உருவாக்கும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன.

பிரேசிலின் ரியோ டி ஜெனரோவில் கடந்த மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த அமைப்பை "அமெரிக்காவுக்கு எதிரானது" என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து, பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகியவற்றின் மீது, ஏற்கனவே விதிக்கப்பட்ட 50% வரிகளுக்கு மேலாக, மேலும் 10% கூடுதல் வரி விதிக்கப்படலாம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் திட்டம் அமலாகும் பட்சத்தில், BRICS நாடுகளுக்கிடையிலான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். இந்த சூழ்நிலையின் பின்னணியில், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து பதிலளிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் முதலில் பிரதமர் மோடி உடன் பேசியுள்ளார். அடுத்ததாக சீன அதிபர் ஜின்பிங் உடனும் விரைவில் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+