கடனை அடைக்க சொத்தை விற்ற இந்தியா புல்ஸ்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த சனிக்கிழமை அன்று, தனது லண்டன் சொத்தை 1,830 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இது இந்திய வர்த்தகத்தில் உள்ள கடனை அடைக்கவும், நிறுவனத்தை மேம்படுத்தவும் இந்தியா புல்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 28ம் தேதி இந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்கள் கொடுத்துள்ளதாகவும், இது தனது லண்டன் சொத்தினை 200 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பி.எஸ்,இக்கு அளித்துள்ள அறிக்கையில், இந்தியா புல்ஸ் நிறுவனத்தின் தூணை நிறுவனமான செஞ்சுரி லிமிடெட் நிறுவனத்தின், அதன் முழு பங்குகளையும் விலக்கிக் கொண்டுள்ளது. இது லண்டனில் உள்ள மறைமுகமான சொத்து என்றும் கூறப்படுகிறது.

இந்திய வர்த்தகத்தில் கவனம் செலுத்த திட்டம்

இந்திய வர்த்தகத்தில் கவனம் செலுத்த திட்டம்

இந்த சொத்து விற்பனை மூலம் இந்த நிறுவனம் தனது இந்திய வணிகத்தில் கவனம் செலுத்துவதற்கும் கடனைக் குறைப்பதற்கும் தனது திட்டங்களை முன்னரே வெளியிட்டது. லண்டனில் நிலவி வரும் பிரெக்ஸிட் பிரச்சனைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையின் வெளிச்சத்தில் லண்டன் சொத்து சந்தை மந்தமாகவே உள்ளது. இது பிரெக்ஸிட் வாக்கெடுப்பு முடிவின் காலத்திலிருந்தும் நீடித்த தேய்மானத்தைக் கொண்டுள்ளது என்றும் ஒர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குனர்கள் குழு ஒப்புதல்

ஏற்கனவே இயக்குனர்கள் குழு ஒப்புதல்

இந்த நிலையில் லண்டனில் உள்ள 22 ஹனோவரில் உள்ள கட்டுமானத்தை நிறைவு செய்ய, இன்னும் 133 மில்லியன் பவுண்டுகள் கடன் தேவை என்று கூறியுள்ளது இந்த நிறுவனம். கடனைக் குறைப்பதற்கும் மும்பை மற்றும் என்.சி.ஆர் சந்தைகளில் அதிக கவனம் செலுத்துவதற்கும், லண்டன் சொத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் நேரடி அல்லது மறைமுக பங்குகளை விலக்குவதற்கும், இதற்கு இந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

கடனை அடைக்க திட்டம்

கடனை அடைக்க திட்டம்

இந்த நிலையிலேயே இந்த நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் லண்டன் சொத்தை மொத்தமாக 200 மில்லியன் பவுண்டுகளுக்கு கையகப்படுத்த முன்வந்தனர். இது 161.5 மில்லியன் பவுண்டுகள் வாங்குவதற்கான செலவுக்கு எதிராக இருந்தது என்றும் இந்தியா கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்திலேயே இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளை திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் தூதரக குழுமத்திற்கு 950 கோடி ரூபாய்க்கு விற்றனர். இந்த நிலையில் நிதிச் சேவைகளில் இருந்து கவனம் செலுத்துவதற்கும், ரியால்டி வணிகத்திலிருந்து வெளியேறுவதற்கும் அதன் மூலேபாயத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது.

வங்கி இணைப்புக்கு ரிசர்வ் வங்கி நிராகரிப்பு

வங்கி இணைப்புக்கு ரிசர்வ் வங்கி நிராகரிப்பு

எனினும் இந்தியா புல்ஸ் நிறுவனம் பின்னடைவையே சந்தித்தது. ஏனெனில் சிக்கலான தனியார் துறையை சேர்ந்த இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸை சிக்கலான தனியார் துறை கடன் வழங்குனரான லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைப்பதை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்திய ரிசர்வ் வங்கி, பலவீனமான நிதி ஆரோக்கியம் காரணமாக கட்டுப்பாடுகளை விதித்ததை அடுத்து இந்த இணைப்பிற்காக யூகங்கள் எழுந்தன.

பல்வேறு சொத்துகள் விற்பனை

பல்வேறு சொத்துகள் விற்பனை

இந்த நிலையில் இந்த வங்கித் துறையில் நுழைய இந்தியா புல்ஸ் தனது பல்வேறு சொத்துகளை தனியார் பங்கு நிறுவனமான பிளாக்ஸ்டோன் நிறுவனத்துக்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணையுமா? அல்லது இந்த சொத்தை விற்பனை மூல ஏற்கனவே உள்ள வர்த்தகத்தை இன்னும் விரிவுபடுத்துமா? என்பதை பொறுத்திறுந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: debt கடன்
English summary

India Bulls sold its property to Rs.1,830 crore for debt

India Bulls sold its property to Rs.1,830 crore for debt issue, and its may use for Indian business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X