இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்கு பின்பு அனைத்து பிரிவுகளிலும், அதிகம் பணியில் இருக்கும் ஒரு நாடு என்றால் அது கனடா தான். ஐடி, மருத்துவம் மட்டும் அல்லாமல் அனைத்து மட்டங்களிலும் இந்தியர்கள் கனடாவில் பணியாற்றி வருகிறார்கள், சமீபத்தில் கனடா அரசு விசாவிலும், வெளிநாட்டில் இருந்து வரும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு பணியாற்றும் உரிமை என் பல விஷயங்களில் விசா, வொர்க் பர்மிட் கொடுத்தது.
இதேபோல் கனடாவில் இந்திய நிறுவனங்களுக்கும் மிகவும் சாதகமான வர்த்தக சூழ்நிலை இருந்த காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் கனடாவில் குவிந்தது. ஆனால் இப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வின் குற்றச்சாட்டு காரணமாக இரு நாடுகள் மத்தியிலான நட்புறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இரு நாடுகள் மத்தியிலான பிரச்சனை உடனடியாக சரிசெய்யும் அளவில் இல்லை என்பதாலும், நாஸ்காம் அமைப்பும் உடனடியாக பாதிப்படையும் அளவுக்கு பெரிய பிரச்சனைகளும் இல்லை என அறிவித்திருக்கும் வேளையில்.. இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி காத்திருந்து நடப்பதை கூர்ந்து கவனிப்பது தான்.
செப்டம்பர் 20 ஆம் தேதி கனடா நாட்டு ஐடி நிறுவனமான Resson Aerosace தானாக முன்வந்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடனான முதலீட்டு கூட்டணி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக செப்டம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமை இரவு 8.19 மணிக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் ரெஸ்ஸோ நிறுவனத்தில் வைத்திருந்த 11.18 சதவீத பங்குகளுக்கு இணையான 4.7 மில்லியன் கனடா டாலர்கள் பணத்தை அதே நாளில் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் இந்திய அரசு அடுத்த அறிப்பு வரும் வரையில் கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல இந்தியாவில் இருந்து கனடா செல்பவர்களுக்கும் பல அறிவுரை வழக்கப்பட்டும் உள்ளது, கனடாவும் விசா கொடுப்பதில் பல கெடுபிடிகளை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் இன்போசிஸ் Toronto, Calgary, Vancouver பகுதியில் அலுவலகம் வைத்துள்ளது, சமீபத்தில் IPS canada Inc நிறுவனம் Ottawa-வில் துவக்கப்பட்டு 8000 ஊழியர்கள் வரையில் சேர்க்க திட்டமிட்டது. டிசிஎஸ் அமெரிக்கா - கனடாவில் மட்டுமே சுமார் 53000 ஊழியர்களை பல பிரிவுகளில் வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது.
இப்படி பல இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் சிறிதும், பெரிதுமாக கனடாவில் தனது பங்கீட்டை வைத்துள்ளது. இப்படியிருக்கையில் இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை பெரிதாக மாறினால் இதன் பின்விளைவு இத்துறை சார்ந்த ஊழியர்களை நேரடியாக பாதிக்கும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications