சென்னை: இந்தியாவில், சீன நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில், இரு நாடுகளின் எல்லையில் ராணுவத்தினர் இடையே நடத்த தாக்குதல் சம்பவம் பெரும் பாதிப்பை இந்தியா - சீனா மத்தியிலான வர்த்தகத்தில் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா அரசு, சீன முதலீடுகள் முதல் சீன தொழில்நுட்பம், சீன அதிகாரிகள் வரையில் இந்தியாவுக்கு வருவதைத் தடை செய்தது. இதன் மூலம் இந்திய வர்த்தக துறை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது குறித்த கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா-சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக, இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தியாளர்கள் சுமார் 15 பில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத்தட்ட ரூ.1,12,500 கோடி உற்பத்தி இழப்பையும், 1 லட்சம் வேலைவாய்ப்புகளையும் இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்சனை சீன குடிமக்களுக்கான விசா வழங்கும் செயல்பாட்டில் ஏற்படும் தாமதம் மற்றும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்கள் மீதான அரசின் விசாரணை ஆகியவற்றால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தித் துறை பல்வேறு அமைச்சகங்களுக்குச் சமர்ப்பித்த அறிக்கைகளில், இந்தியா 10 பில்லியன் டாலர் (ரூ.75,000 கோடி) மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்பையும், 2 பில்லியன் டாலர் (ரூ.15,000 கோடி) மதிப்பிலான உள்நாட்டு மதிப்புக் கூட்டல் ( Domestic Value Addition - DVA) இழப்பையும் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தி துறையை சேர்ந்த தொழில்துறை நிர்வாகிகளின் கூறுகையில், தற்போது 4,000 முதல் 5,000 சீன நிறுவன அதிகாரிகளின் விசா விண்ணப்பங்கள் அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
இதன் காரணமாக, இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தி துறையின் விரிவாக்கத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு 10 நாட்களுக்குள் வணிக விசா அதாவது பிஸ்னஸ் விசா விண்ணப்பங்களை அனுமதிக்கும் வழிமுறையை உருவாக்கியிருந்தாலும், சீன அதிகாரிகளுக்கும், வல்லுனர்களுக்கும் தொடர்ந்து மாதக்கணக்கில் விசா வழங்கப்படாமல் உள்ளது.
இந்திய செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சங்கம் (ICEA) மற்றும் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கம் (MAIT) ஆகிய தொழில் சங்கங்கள், தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக தாமதமாகும் சீன நிறுவன அதிகாரிகளின் விசா ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம், திறன் பரிமாற்றம், புதிய உற்பத்தி பிரிவுகளை நிறுவுதல் மற்றும் இயக்குதல், திறன் மேம்பாட்டுச் செயல்முறைகளை உருவாக்குதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்த துறையில் முன்னோடியாக இருக்கும் சீன நிர்வாகிகள் தேவைப்படுகின்றனர் என்று தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து உற்பத்தி தளங்களை அமைக்க இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட சீன நிறுவனங்களின் தலைமை குழுக்களின் விசா விண்ணப்பங்களும் தேங்கியுள்ளன. இதுவும் முக்கிய பின்னடைவாக உள்ளது.
இந்தியா-சீனா இடையே வழக்கமான வணிக நடவடிக்கைகள் சிறப்பாக இருந்திருந்தால், தற்போதைய 18% ல் இருந்து 22-23% ஆக இந்திய நிறுவனங்களின் உள்நாட்டு மதிப்புக் கூட்டல் அதிகரித்திருக்கும் என ICEA மதிப்பிடுகிறது.
இதன் மூலம், உள்நாட்டு மொபைல் போன் எகோசிஸ்டம் ரூ.15,000 கோடி மதிப்பிலான கூடுதல் உள்நாட்டு மதிப்பு கூட்டல் (DVA) ஆண்டு தோறும் கிடைத்திருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications