சீனா இந்தியா இடையேயான இந்திய எல்லை பிரச்சனையானது இன்னும் எந்தளவுக்கு செல்லுமோ தெரியவில்லையே. ஏற்கனவே இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், தற்போது மிக பரப்பரப்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சனையானது தற்போது வர்த்தக பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.
அதிலும் இராணுவ வீரர்கள் 20 பேர் பலியான நிலையில், அது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தியா சீனாவை தவிர்ப்பதால் சீனாவுக்கு பிரச்சனையோ இல்லையோ? அது நிச்சயம் இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
சீனாவுக்கு பெரிய பாதிப்பில்லை
சொல்லப்போனால் உலகளவில் சீனா வர்த்தகம் செய்து வரும் நிலையில், சீனாவினை இந்தியா தவிர்ப்பதால், அது பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது. ஏனெனில் சீனாவில் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 15% தான். ஆனால் இந்தியாவும் பல பொருட்களை சீனா மற்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தாலும், அவற்றில் சில துறைகள் 60 சதவீதவீதத்திற்கும் மேலாக சீனாவினையே நம்பியுள்ளது.
சீனா முக்கிய பங்கு
உதாரணத்திற்கு இந்திய மருத்துவ துறை. இந்தியா இன்று உலகளவில் மருந்து ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனினும் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலக்கூறுகளுக்கு இந்தியாவினை நாடியுள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் சீனாவினை தவிர்ப்பது சீனாவுக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் நல்லதல்ல என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டது.
சீனா இந்தியாவுக்கு தான் பாதிப்பு
இதுவரை பாய்காட் சீனா பற்றி சீனா தரப்பில் பெரிதும் பேசப்படாத நிலையில், தற்போது சீன அதிகாரிகள் தரப்பில் இந்திய சீன வர்த்தக உறவை முறித்தல் என்பது இரு நாடுகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். அது யாருக்கும் நன்மையை கொடுக்காது. இறுதியில் மோசமான விளைவைத் தான் பிரதிபலிக்கும் என்றும் சீனவின் தூதர் கூறியுள்ளார்.
நாம் பங்காளிகளாக இருக்க வேண்டும்
சீனத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பாதி வழியில் சந்திக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முறியடிக்கவோ அல்லது முந்திச் செல்லவோ நாம் ஒன்றும் எதிரிகள்