இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியாவின் முடிவு மாறுமா அல்லது இதே நிலைப்பாடு தொடருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது.
இந்தியா பல காலாண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்திய அரசு தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை மாணவர்களுடன் கலந்துரையாடியபோது தெரிவித்தார். ஏற்கனவே சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக நான் நினைக்கிறேன். இதன் மூலம் ரஷ்யாவுடன் இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும் என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு மேற்கத்திய நாடுகளும், அதன் நட்பு நாடுகளும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அதிகப்படியான கட்டுப்பாடு தடையை விதித்தது. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மொத்தமாக முடங்கியது, ஆனால் இந்தியா, சர்வதேச நாடுகள் உடனான நட்புறவில் எவ்விதமான விரிசல் ஏற்படாமல் கச்சா எண்ணெய் வாங்கியது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% பங்களிப்பை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ரஷ்யாதான் இந்தியாவின் முதன்மையான எண்ணெய் சப்ளையராக இருந்தது. ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடுத்த டாப் சப்ளையர்களாக இருந்தன.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில் உலக நாடுகள் ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வாங்குவதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சுமார் 30-40 டாலர்கள் வரை அதிகரிப்பதை இந்தியா தடுக்க உதவி செய்துள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்துப் பல விமர்சனங்கள் துவக்கத்தில் இருந்தாலும், சில மாதங்களுக்குப் பின்பு இந்தியாவின் செயல்பாடுகள் உலக நாடுகளுக்குச் சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகள் குறைந்தது. இதேவேலையில் வெனிசுலா, ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வராமல் இருப்பது குறித்துக் கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications