நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனவரி 29, 2026 அன்று பாராளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஆவணம் அரசின் நிதி செயல்பாட்டின் அறிக்கையாகும். இதில் 2026-27ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8% முதல் 7.2% வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சாத்தியமான வளர்ச்சி விகிதம் சுமார் 7% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான ஆய்வில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் 4% இலக்கிற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்கும் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

இந்தியாவுக்கு கிடைத்துள்ள சாதகமான சப்ளை செயின் வாய்ப்புகள் மற்றும் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் செய்யப்பட்ட மறுசீரமைப்பு மூலம் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்க இலக்கை அடையவது சாத்தியமாகும். டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 1.3% ஆக இருந்தது. இது ரிசர்வ் வங்கியின் 2-6% வரம்புக்கு கீழே நான்காவது மாதமாக உள்ளது.
மேலும் எலக்ட்ரானிக்ஸ் துறை 2025-26ஆம் நிதியாண்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்துறையில் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. குறிப்பாக மொபைல் உற்பத்தியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2014-15இல் ரூ.18,000 கோடியாக இருந்த உற்பத்தி மதிப்பு 2024-25இல் ரூ.5.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 30 மடங்கு அதிகரிப்பாகும். இந்தியா நிகர இறக்குமதியாளராக இருந்து உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. 2014இல் 2 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
பொருளாதார ஆய்வறிக்கை மத்திய பட்ஜெட்டுக்கு முன் வெளியாகும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆய்வு அடுத்த ஆண்டு பொருளாதார கொள்கைகளுக்கு வழிகாட்டியாக அமையும்.
வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு, தொழில்துறை முன்னேற்றம் ஆகியவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். சாதாரண மக்களுக்கு இது வேலைவாய்ப்பு, விலை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார நம்பிக்கையை அதிகரிக்கும் சமிக்ஞையாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications