நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனவரி 29, 2026 அன்று பாராளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஆவணம் அரசின் நிதி செயல்பாட்டின் அறிக்கையாகும். இதில் 2026-27ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8% முதல் 7.2% வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சாத்தியமான வளர்ச்சி விகிதம் சுமார் 7% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான ஆய்வில் ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் 4% இலக்கிற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்கும் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

இந்தியாவுக்கு கிடைத்துள்ள சாதகமான சப்ளை செயின் வாய்ப்புகள் மற்றும் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் செய்யப்பட்ட மறுசீரமைப்பு மூலம் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்க இலக்கை அடையவது சாத்தியமாகும். டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 1.3% ஆக இருந்தது. இது ரிசர்வ் வங்கியின் 2-6% வரம்புக்கு கீழே நான்காவது மாதமாக உள்ளது.
மேலும் எலக்ட்ரானிக்ஸ் துறை 2025-26ஆம் நிதியாண்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்துறையில் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. குறிப்பாக மொபைல் உற்பத்தியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2014-15இல் ரூ.18,000 கோடியாக இருந்த உற்பத்தி மதிப்பு 2024-25இல் ரூ.5.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 30 மடங்கு அதிகரிப்பாகும். இந்தியா நிகர இறக்குமதியாளராக இருந்து உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. 2014இல் 2 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
பொருளாதார ஆய்வறிக்கை மத்திய பட்ஜெட்டுக்கு முன் வெளியாகும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆய்வு அடுத்த ஆண்டு பொருளாதார கொள்கைகளுக்கு வழிகாட்டியாக அமையும்.
வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு, தொழில்துறை முன்னேற்றம் ஆகியவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். சாதாரண மக்களுக்கு இது வேலைவாய்ப்பு, விலை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார நம்பிக்கையை அதிகரிக்கும் சமிக்ஞையாக உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications