இந்தியாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது, லட்சக்கணக்கான மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரிசையில் நின்று அடுத்த 5 ஆண்டுக்கு இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறார்கள். மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், அவர்களின் விரல்களில் ஊதா நிற மை வைக்குப்படும்.
இது சாதாரண மையில்லை, இது சில்வர் நைட்ரேட் மை. இது விரலில் அழிக்க முடியாத தடையத்தை ஏற்படுத்த கூடியவை, இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை இந்த மை நீடிக்கும். இந்த மை அழிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதால் வாக்காளர் மோசடி மற்றும் போலி வாக்குகளை இதை தடுக்கிறது.

இந்த மை யார் தயாரிக்கார்கள் தெரியுமா..? 1937 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மை மைசூரில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கப்படுகிறது. மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் இந்த தேர்தலுக்காக 2.7 மில்லியன் பாட்டில்கள் மை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
கர்நாடக அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் 1962 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்திற்காக மட்டுமே மை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மை தான் ஒருவர் வாக்களித்ததற்கான சான்றாக இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்படும் மை.
இந்த நிறுவனம் வழக்கமாக தனது வர்த்தகம், உற்பத்தியை செய்தாலும், தேர்தல் நடக்கும் காலத்தில் கூடுதல் பிசியாக இருக்கும். ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் இந்த தொழிற்சாலையில் இருந்து மை டப்பாக்கள் செல்ல உள்ளது.
அதுவும் தற்போது பொது தேர்தல் என்பதால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலருக்கும் அதிகம் சம்பாதிதுள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த மை தயாரிக்கும் நிறுவனம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் நடக்கும் தேர்தல் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான தேர்தல் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
இந்த வருடத்திற்கான பொது தேர்தல் சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 14 பில்லியன் டாலக் செலவில் நடத்தப்படுகிறது என ஃபர்ஸ்ட் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த தேர்தலாக உள்ளது.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications