ஸ்மார்ட்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? -உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஸ்மார்ட்போன் உற்பத்திச் செலவை குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என இந்தியா செல்லுலார் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) பல பரிந்துரைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளது.

ICEA தனது பரிந்துரைகளில், மைக்ரோஃபோன்கள், அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகைகள் (PCBs) மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் போன்ற மொபைல் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரியைக் குறைக்கவும், மூலதனப் பொருட்கள் மற்றும் பிற கூறுகளுக்கான வரி விகிதங்களைச் சீரமைக்கவும் வலியுறுத்தியுள்ளது. ஆப்பிள், ஃபாக்ஸ்கான், டிக்சன், சியோமி, விவோ, ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ICEA-வின் உறுப்பினர்களாகும்.

ஸ்மார்ட்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? -உற்பத்தியாளர்கள் கோரிக்கை

"மொபைல் போன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மீதான சீனாவின் அண்மைய ஏற்றுமதி கட்டுப்பாடுகள், விநியோகச் சங்கிலி அபாயங்களை அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களை இந்தியா நம்பியிருப்பது இனி சரிவராது" என்று ICEA கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. எனவே, மூலதன உபகரணங்களுக்கான பூஜ்ஜிய வரிச் சலுகையை, அவற்றின் உள்ளடக்கக் கூறுகள், துணை அசெம்பிளிகள் வரையிலும் நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தொலைபேசி மற்றும் லித்தியம்-அயன் செல் உற்பத்திக்குத் தேவையான சில முக்கியமான, சிறப்பு இயந்திரங்கள் தற்போதுள்ள சுங்க வரி விலக்கு அறிவிப்புகளின் வரம்பிற்கு வெளியே உள்ளன. மத்திய பட்ஜெட் 2025-26 இல் பல்வேறு மூலதனப் பொருட்களுக்கு விலக்கு அளித்தபோதும், இந்த இயந்திரங்கள் விலக்கு பெறவில்லை என கூறியுள்ளது. ICEA கூற்றுப்படி, இந்த விலக்கு இல்லாதது திட்டச் செலவுகளை அதிகரிப்பதோடு, முழுமையான உற்பத்தி வரிசைக்குத் தடையை உருவாக்குகிறது. விலக்கப்பட்ட இயந்திரங்கள், லித்தியம்-அயன் செல் மற்றும் மொபைல் போன் உற்பத்திக்குத் தனிப்பயனாக்கப்பட்டவை, பொதுவானவை அல்ல; இவை முழு உற்பத்திச் சங்கிலிக்கும் அத்தியாவசியமானவை என்பதை கவனிக்க அறிவுறுத்தியுள்ளது.

"இந்த இயந்திரங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை; மேலும் அவற்றின் இறக்குமதிக்குக் கணிசமான வரி விதிக்கப்பட்டு, மூலதனச் செலவை 7.5 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது." உலகளாவிய விநியோகச் சவால்கள் மற்றும் முக்கிய பேட்டரி பொருட்கள் மீதான சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள், தற்சார்பான உள்நாட்டுத் திறனை உருவாக்கும் அவசரத் தேவையை அதிகரித்துள்ளன.

"இந்த விலக்குகளை விரிவுபடுத்துவது நிறுவல் செலவுகளைக் குறைத்து, செயல்பாட்டைத் விரைவுபடுத்தும். இது ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்தி, ஆற்றல் சேமிப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும்," என்றும் ICEA வலியுறுத்தியுள்ளது.மேலும், ஆட்டோமொபைல்களின் டாஷ்போர்டுகளில் பயன்படுத்தப்படும் திரைகள் உட்படப் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளேக்களுக்கான வரி அமைப்பைச் சீரமைக்க அரசுக்குக் கேட்டுக்கொண்டுள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து டிஸ்பிளே அசெம்பிளிகளுக்கும் 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க வேண்டும்; அதேவேளையில், அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படும் அனைத்து பாகங்களுக்கும் அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இது உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக் சர்க்யூட்டுகளின் அடிப்படையான அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகை அசெம்பிளி (PCBA) மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்க ICEA வலியுறுத்தியுள்ளது. இது உள்ளூர் சந்தையை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றும். "PCBA உற்பத்தி உள்நாட்டில் நன்கு நடைபெறுவதால், வரி குறைப்பு உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிக்காது. மாறாக, இது இந்தியாவின் செலவுசார் போட்டித்தன்மையை மேம்படுத்தி, தன்னிச்சையான விலை நிர்ணயத்தைத் தடுப்பதன் மூலம் நியாயமான சந்தைப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும், மேலும் உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பையும் வலுப்படுத்தும்," என்று இந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+