இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் முக்கியமான விஷயம், செமிகண்டக்டர் சிப் தான். இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்க டாடா குழுமம் முதல் முருகப்பா குரூப் வரையில் பல நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தாலும்...
இத்துறைக்கு முக்கியத் தேவையாக இருக்கும் தொழில்நுட்ப கூட்டணிகளும், உதவிகளும் சரியாகக் கிடைப்பது இல்லை. செமிகண்டக்டர் சிப் தயாரிப்பாக வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி மெகா திட்டத்தை அறிவித்த வேளையிலும் தொழில்நுட்ப உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் கூட்டணி முறிந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு முயற்சியின் கீழ் செமிகண்டக்டர் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, திறமை மேம்பாடு, கூட்டாண்மை மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பைப் பெறும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டம் நடக்க உள்ள நிலையில், இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை செமிகண்டக்டர் துறையில் பல்வேறு முக்கிய விஷயங்களுக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான கூட்டத்தின் போது இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக நிர்வாகத் துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் மற்றும் துணைத் தலைவர் வேரா ஜூரோவா ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இந்தியா-ஐரோப்பிய மத்தியிலான ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் ஏப்ரல் 2022 துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஐரோப்பிய ஓன்றிய நாடுகளில் இருந்து கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications