டெல்லி: இந்தியா சமீப காலமாக நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றது. இதனால் தொழில் துறை உற்பத்தி, மின் உற்பத்தி பாதிப்பு என பல பிரச்சனைகள் உள்ளன.
ஏற்கனவே எரிபொருள் விலை அதிகரிப்பால், இந்தியாவில் பணவீக்கம் பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது.
இந்த நிலையில் நிலக்கரிக்கும் பற்றாக்குறை என்பது மேற்கோண்டு பெரும் பிரச்சனையாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தள்ளுபடி விலையில் நிலக்கரியா?
ஆக இப்படியான இக்கட்டான நிலையை தவிர்க்க, பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், தள்ளுபடி விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பு குறைவு
மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பானது வெகுவாக குறைந்துள்ளது. மத்திய மின்சார ஆணையத்தின் தகவல்படி, 173 மின் நிலையங்களில் 23.32 டன் நிலக்கரி இருப்பு உள்ளது. தேவையான இருப்பில் வெறும் 35% மட்டுமே உள்ளது. தேவையில் பாதியளவு கூட இல்லை என்பதே கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
உற்பத்தி இருக்கலாம்
அரசு மின்சார வழங்கல் நிறுவனங்கள் பருவ மழை காலத்திற்கு ஏற்ப, நிலக்கரி கையிருப்பினை வைக்காவிட்டால், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் குறைந்த அளவிலான கையிருப்பு இருக்கும். இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கலாம்.
என் டி பி சி லிமிடெட் மற்றும் தாமோதர் வாலி கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, கூடுதலாக நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்சனை
உலகின் 4வது பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்ட இந்தியாவில் அதிகளவிலான வெப்பம் காரணமாக, மின்சார தேவையானது மிக அதிகளவில் உள்ளது. ஆனால் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டுகள் அதிகளவில் நிலவி வருகின்றது.
இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்கள் சுமார் 2 மில்லியன் டன் நிலக்கரியை எரித்து மின்சார உற்பத்தி செய்கின்றன.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications