உலகளவில் சைபர் அட்டாக், சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் பணக்கார்கள், பெரும் நிறுவனங்கள் முதல் இளம் பட்டதாரிகள் வரையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஸ்பைஸ்ஜெட், ரேசர்பே போன்ற முன்னணி நிறுவனங்களைச் சைபர் அட்டாக், ஹேக்கிங் மூலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகிலேயே அதிகச் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
FBI அமைப்பு
அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) சமீபத்தில் உலகில் சைபர் கிரைம்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இப்பட்டியலில் உலகின் பல நாடுகள் இடம்பெற்று இருக்கும் வேளையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள் மூலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியிலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேலும் இணைய மோசடிகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு டெக்னிக் ஆக ஃபிஷிங் (Phishing) விளங்குகிறது. FBI அமைப்பின் இணையக் குற்ற புகார் மையம் (IC3) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
18.7 பில்லியன் டாலர் இழப்பு
எப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017 மற்றும் 2021 க்கு இடையில், IC3 பெற்ற புகார்கள் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 18.7 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை இழந்துள்ளனர். மேலும் எப்பிஐ மொத்தம் 2,760,044 புகார்களைப் பெற்றுள்ளது.
முதியவர்கள்
மேலும் இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள் தான். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2021ல் மட்டும் 1.68 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர், இதேபோல் 50-59 வயதுடையவர்கள் சுமார் 1.26 பில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். இதேவேளையில் 20 வயதில் இருப்பவர்கள் வெறும் 101.4 மில்லியன் டாலர் மட்டுமே இழந்துள்ளதாகத் தெரிகிறது.
டாப் 20 நாடுகள்
இப்பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, மெக்சிகோ, பிரேசில், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, கிரீஸ், சீனா, ஸ்பெயின், பாகிஸ்தான், இத்தாலி, மலேசியா, துருக்கி, ஜப்பான், ஆகிய 20 நாடுகள் இடம்பெற்றுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications