இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முக்கிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகத்தை பயமுறுத்தி வரும் முக்கியமான பிரச்சனை என்றால் அது குறைந்து வரும் இளம் தலைமுறையினரின் மக்கள் தொகை தான்.
இந்த நிலையில் இந்திய முதியோர் அறிக்கை 2023 என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (UNFPA) மற்றும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் அமைப்பு (ஐஐபிஎஸ்) உடன் இணைந்து செய்யப்பட்ட ஆய்வில் முக்கியமான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன்படி 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 60 வயதிற்கும் அதிகமாக இருக்கும் முதியவர்களின் எண்ணிக்கை 149 மில்லியனாக இருந்தது, இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10.5 சதவீதமாகும்.
இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக வளர்ச்சி அடைந்து 20.8 சதவீதமாக உயர்ந்து 347 மில்லியனாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டு உள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் இந்த அளவு 36 சதவீதமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருவதாகவும், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் குழந்தைகளின் எண்ணிக்கையை விடவும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் இது 2046 ஆம் ஆண்டில் நடக்க வாய்ப்புள்ளதாக இந்திய முதியோர் அறிக்கை 2023 என்ற ரிப்போர்ட் கூறுகிறது.
இதைவிட முக்கியமாக இந்தியாவில் இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் பேர் மோசமான நிதிநிலையில் இருப்பதாகவும். இதன் மூலம் முதியவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சுகாதார வசதிகள் பெறுவதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் முதியவர்களின் வேலைவாய்ப்பு, பென்ஷன், வருமானம் குறித்து ஆய்வு செய்யும் போது சுமார் 18.7 சதவீதம் முதியோருக்கு எவ்விதமான வருமானமும் இல்லை. இந்த அளவு நாட்டின் 17 மாநிலத்தில் மிகவும் அதிகமாக உள்ளது உத்தராகண்ட்-ல் 19.8 சதவீதம் என்ற அளவில் துவங்கி லட்சத்தீவு-ல் 42.4 சதவீதம் என முடிகிறது இந்த பட்டியல்.
தற்போதைய நிலவரப்படி உலகிலேயே அதிகப்படியான இளைஞர்கள் கொண்ட நாடாக உள்ளது இந்தியா. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கு கீழ் உள்ளனர், மேலும் முதியோர் மக்கள் தொகை அளவு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. உதாரணமாக இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அதிக முதியோர்கள் எண்ணிக்கை கொண்டு உள்ளது.
இந்திய நிறுவனங்கள் CSR பிரிவின் கீழ் முதியோர் சேவைக்காக 2014 முதல் 2021 வரையிலான காலத்தில் சுமார் 1,259.6 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இது முந்தைய 7 ஆண்டு காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 182 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

2ஆவது குழந்தை பெற்று கொண்டால் ரூ.25,000 நிதியுதவி, இலவச கல்வி!! அரசின் அதிரடி அறிவிப்பு!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications