மத்திய நிதி அமைச்சகத்தின் மாதாந்திர மதிப்பாய்வு அறிக்கையில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் அபாயங்கள் தோன்றக்கூடும் என்று கூறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது உணவு மற்றும் எரிபொருட்களின் அதிகப்படியான விலை தான், உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர அடிப்படையான காரணம் சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகள் தான் என விளக்கம் கொடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளில் பொது தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் பொருளாதார மந்தநிலை உருவாகக்கூடும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் கணிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தால் பங்குச்சந்தை 25 சதவீதம் வரையில் சரிந்து சில மாதங்களில் மீண்டு வரும் என கணிக்கப்பட்ட நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் ரெசிஷன் கணிப்பு ஆட்சி மாற்றம் நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி பெரும் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும், முதலீட்டு சந்தையிலும் இருக்கும் என தெரிகிறது.
மேலும் தற்போதைய பணவீக்க மாற்றங்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிகளை உஷார் நிலையில் வைத்துள்ளது என்றால் மிகையில்லை. இதற்கிடையில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இலக்கை அடைவதில் பல சவால்கள் நிறைந்துள்ளது, மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவும் முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக மதிப்புள்ள பொருட்களின் இறக்குமதிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள ஏற்றுமதிகள் அக்டோபர் மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவீட்டை வரலாற்று உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டை விட 60% உயர்ந்து 31 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஒன்பது டன் தங்கத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications